செய்திகள் :

தில்லியில் கனமழை: வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

post image

புது தில்லி: தலைநகர் தில்லியில் வெள்ளிக்கிழமை காலை பெய்த கனமழையைத் தொடர்ந்து நஜாப்கரில் வீடு இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு பெண் என நான்கு பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைநகர் தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. துவாரகா, கான்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மழை காரணமாக நஜாப்கரில் வீடு இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு பெண் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே கனமழையைத் தொடர்ந்து நஜாப்கரில் உள்ள கர்காரி நஹார் கிராமத்தில் காலை 5 மணிக்கு வீடு இடிந்து விழுந்ததாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளில் சிக்கிய நான்கு பேரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். . அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சீமான் மீதான விசாரணை: இடைக்கால தடை நீட்டிப்பு

சீமானுக்கு எதிரான விஜயலட்சுமியின் புகார் குறித்த வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சீமானின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க தமிழ்நாடு காவல்துறைக... மேலும் பார்க்க

அம்பேத்கர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு!

அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடை... மேலும் பார்க்க

வேளாண் துறையில் 151 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வெள்ளிக்கிழமை முதல்வர் மு.... மேலும் பார்க்க

கர்நாடகம், தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம்

புதுதில்லி: கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளை சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான கொலிஜியம் (நீதிபதிகளை நீத... மேலும் பார்க்க

தஞ்சையில் மே 7ல் உள்ளூர்‌ விடுமுறை!

தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுவதால் மே 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா நட... மேலும் பார்க்க

பேரவை நுழைவுவாயிலில் திடீரென தீ அலாரம் ஒலி எழுப்பியதால் பரபரப்பு!

சென்னை: தலைமைச் செயலக பேரவை வளாக நுழைவுவாயில் அருகில் தீயணைப்புத்துறையினரால் பொருத்தப்பட்ட தீ விபத்து முன்னெச்சரிக்கை அலாரம் திடீரென ஒலி எழுப்பியதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.சென்னை தலை... மேலும் பார்க்க