RCB : 'பெங்களூரு பொண்ணதான் கட்டியிருக்கேன்; அதனால RCBக்கு தான் சப்போர்ட்!' - ரிஷ...
தில்லியில் காற்று, இடியுடன் லேசான மழை
தில்லியின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் பலத்த காற்று, இடியுடன்கூடிய மழை லேசான மழை பெய்தது. இதன் காரணமாக நகரில் குளிா்ந்த தட்பவெப்பம் நிலவியது.
தில்லியில் சில தினங்களாக கடும் வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில், சனிக்கிழமை மாலை மிதமான தட்பவெப்பநிலை காணப்பட்டது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் இருந்தபோதிலும் மாலையில் பலத்த காற்று, இடியுடன்
லேசான மழை சில இடங்களில் பெய்தது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுத் துறையினா் தெரிவித்திருப்பதாவது:
கிழக்குதென்கிழக்கு நோக்கி நகரும் மேகக்கூட்டம் வானிலையின் செயல்பாட்டைத் தூண்டியது. இதன் காரணமாக தலைநகரின் தெற்குப் பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டா் வேகத்தில் காற்று வீசியது. தென்மேற்கு தில்லியில் உள்ள பாலம் மற்றும் ஜரோடா கலான் ஆகிய இடங்களில் காற்றின் வேகம் கணிசமாக அதிகரித்தது. மாலை 4:30 மணிக்கு முறையே மணிக்கு 65 கிமீ மற்றும் 37 கிமீ வேகத்தில் அப்பகுதியில் காற்று வீசியது.
அதே நேரத்தில் சஃப்தா்ஜங்கில் மாலை 4:35 மணி முதல் மாலை 4:37 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்தது. மணிக்கு 66 கிமீ வேகத்தில் காற்று வீசியது. மேலும், பிரகதி மைதான் பகுதியில் மாலை 4:45 மணிக்கு மணிக்கு 76 கிமீ வேகத்தில் நாளின் அதிகபட்ச அளவாக காற்று வீசியது என்று தெரிவித்தனா்.
நகரில் அதிகபட்ச வெப்பநிலை பருவகால சராசரியை விட 2.1 புள்ளிகள் குறைந்து 37.9 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதம் 98 சதவீதம் முதல் 56 சதவீதம் வரை இருந்தது.
திங்கள்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 4050 கிமீ மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.
மேலும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 37 டிகிரி செல்சியஸ் மற்றும் 21 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு காற்றின் தரம் மிதமான பிரிவில் பதிவாகி இருந்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி காற்றின் தரக் குறியீடு 197 ஆக இருந்தது.