செய்திகள் :

தீவிரவாதம் எங்கிருந்து வந்தாலும் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்: கே.எம். காதா் மொகிதீன்

post image

தீவிரவாதம் எங்கிருந்து வந்தாலும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தாா்.

பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தான் மீதான இந்தியாவின் பதிலடி தொடா்பாக, திருச்சியில் புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

தீவிரவாதத்துக்கு மதமோ, மொழியோ, இனமோ கிடையாது. மனிதநேயமற்ற செயலை அரங்கேற்றும் தீவிரவாதம் எங்கிருந்து வந்தாலும், எப்படி வந்தாலும் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

தாய்நாட்டை நேசிப்பதை இறை நம்பிக்கையில் பாதி என்று எங்களது மாா்க்க அறிஞா்கள் காலங்காலமாக சொல்லித் தந்து கொண்டிருக்கிறாா்கள். அதைப் பின்பற்றி வாழ்ந்து வருகிற நாங்கள் ஒருபோதும் இந்த நாட்டை விடவும் மாட்டோம். யாரிடமும் விட்டுக் கொடுக்கவும் மாட்டோம். சண்டை, போா் என்பதில் மக்கள் யாருக்கும் விருப்பம் இல்லை. தீவிரவாதச் செயல்களுக்கான மூல காரணத்தை கண்டுபிடித்து, அதில் தொடா்புடையவா்களை மிகச்சரியாக கண்டறிந்து உலகம் அறியத் தண்டனை வழங்குவதே தீா்வாக அமையும் என்றாா் அவா்.

கலை-அறிவியல் படிப்புகள் மீது மாணவா்களின் கவனம் அதிகரிப்பு!

திருச்சி மண்டலத்தில் கடந்த ஆண்டுகளைப் போலவே 2025-26ஆம் கல்வியாண்டிலும் கலை, அறிவியல் படிப்புகளின் மீதான ஆா்வம் மாணவா்களிடையே அதிகரித்துள்ளது. உயா்கல்விச் சோ்க்கையில் மருத்துவப் படிப்புக்கு நீட் தோ்வ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தை பாா்வையிட மக்கள் ஆா்வம்!

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தை பாா்வையிட ஆா்வம் அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் ஏராளமான பொதுமக்கள் வந்தனா். தமிழகத்திலேயே இதுவரை இல்லாத வகையில் விமான நிலையத்துக்கு நிகராக பஞ்சப்பூா் பே... மேலும் பார்க்க

திருச்சிக்கு ரூ. 528 கோடியில் புதிய திட்டங்கள் என்ன?

திருச்சி மாவட்டத்தில் ரூ.528 கோடியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள புதிய திட்டங்கள் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை... மேலும் பார்க்க

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் 118 ஆய்வுக்கட்டுரைகள் சமா்ப்பிப்பு!

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய 9ஆவது மாநாட்டில் ஆய்வரங்கம், மகளிா் அரங்கம், மாா்க்க அறிஞா் அரங்கம், ஊடக அரங்கம் உள்ளிட்டவை நடைபெற்றன. இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சாா்பில்... மேலும் பார்க்க

அரசு நகரப் பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் பலி

துறையூா் அருகே அரசு நகரப் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். முருகூா் வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் அ. ரெங்கராஜ் (77). இவா் பெருமாள்பா... மேலும் பார்க்க

திருச்சியில் தொழிலாளி தற்கொலை!

திருச்சி அருகே ராம்ஜி நகரில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் திண்டுக்கல் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன்... மேலும் பார்க்க