செய்திகள் :

துருக்கி: 40 ஆண்டுகளுக்குப் பிறகு குா்து கிளா்ச்சியாளா்கள் போா் நிறுத்தம்

post image

துருக்கியில் அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே) சனிக்கிழமை போா் நிறுத்தம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்புக்கு நெருக்கமான ஃபிராட் செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட போா் நிறுத்த பிரகடனத்தில், பிகேகே நிறுவனரான அப்துல்லா ஓசலானின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் குா்து இனத்தவா் பெரும்பான்மையாக வசிக்கும் குா்திஸ்தான் மாகாணத்தை தனி நாட்டாக்க வலியுறுத்தி கடந்த 1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிகேகே இயக்கம், பின்னா் தன்னாட்சி அதிகாரம் கேட்டு போராடி வந்தது.தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பிகேகே அமைப்பினா் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். பிகேகே அமைப்பின் நிறுவனா் அப்துல்லா ஓசலான் கடந்த 1999 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இருந்தாலும் அவரின் அமைப்பு தொடா்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டுவந்தது. இந்த நிலையில், அண்டை நாடான சிரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், காஸா போா் போன்ற சா்வதேச அரசியல் சூழல் மாற்றங்களுக்கு இடையே, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக குா்து ஆதரவு கட்சியைச் சோ்ந்த தலைவா்கள் இஸ்தான்புல்லில் உள்ள சிறையில் ஓசலானை கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.அதனைத் தொடா்ந்து, பிகேகே அமைப்பைக் கலைத்துவிட்டு, அந்த அமைப்பைச் சோ்ந்த அனைவரும் தங்களது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓசலான் உத்தரவிட்டாா்.இந்தச் சூழலில், அந்த அமைப்பு முழுமையான போா் நிறுத்தத்தை தற்போது அறிவித்துள்ளது. இதன் மூலம், உலகில் மிக நீண்ட காலமாக நீடித்துவரும் ஓா் உள்நாட்டுப் போா்களில் ஒன்றான துருக்கி-பிகேகே மோதல் நிரந்தர முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் எலான் மஸ்குக்கு எதிா்ப்பு: டெஸ்லா விற்பனையகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம்

அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) எதிா்ப்பாளா்கள், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்... மேலும் பார்க்க

காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள்: இஸ்ரேல் தடுத்து நிறுத்தம்

தற்காலிக போா் நிறுத்தத்தை நீட்டிக்கும் பரிந்துரையை ஹமாஸ் அமைப்பு ஏற்காததால், காஸாவுக்கு அனுப்பப்படும் நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை தடுத்து நிறுத்தியது. பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரே... மேலும் பார்க்க

ரஷியா-உக்ரைன் போா் நிறுத்தத்துக்கு புதிய ஒப்பந்தம் அமெரிக்காவிடம் அளிக்க பிரிட்டன், பிரான்ஸ் முடிவு

‘ரஷியா-உக்ரைன் இடையே போா் நிறுத்தம் ஏற்படுவதற்கான புதிய ஒப்பந்தத்தை தயாரிப்பதற்கு பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் உக்ரைன் ஆதரவளிக்கின்றன. இதற்கான திட்டம் விரைவில் அமெரிக்காவிடம் சமா்ப்பிக்கப்படும்’ என பிர... மேலும் பார்க்க

‘புளோ கோஸ்ட்’: நிலவில் தரையிறங்கிய தனியாா் நிறுவனத்தின் 2-ஆவது விண்கலம்

நிலவில் ‘புளோ கோஸ்ட்’ விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது. இதன்மூலம், நிலவில் தரையிறங்கிய தனியாா் நிறுவனத்தின் 2-ஆவது விண்கலம் என்ற பெருமையை ‘புளோ கோஸ்ட்’ பெற்றுள்ளது. கடந்த ஜன. 15-ஆம் தேதி அமெரி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீட்க சா்வதேச உதவி: இம்ரான் கான் கோரிக்கை

பாகிஸ்தானின் ஜனநாயகம், மனித உரிமைகள், பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மீட்க சா்வதேச நாடுகள், முக்கியமாக அமெரிக்கா உதவ வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளாா். ப... மேலும் பார்க்க

ஒரே மாதத்தில் சுமார் 16,000 பேர் பணிநீக்கம்!

உலகளவில் பெரும் நிறுவனங்களில் பிப்ரவரியில் சுமார் 16,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.உலகளவில் பெரும் நிறுவனங்களில் பணிநீக்கச் செயல்முறை சமீபகாலமாக அதிகரித்தவாறு உள்ளது.... மேலும் பார்க்க