செய்திகள் :

தூத்துக்குடி: ரவுண்டானா அமைக்கும் பணியை துரிதப்படுத்த மாா்க்சிஸ்ட் கோரிக்கை

post image

தூத்துக்குடியில் ஈ.சி.ஆா். சாலை சந்திப்பில் பள்ளி அருகே ரவுண்டானா அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக கட்சியின் மாநகர செயலாளா் முத்து விடுத்துள்ள அறிக்கை: தூத்துக்குடியின் பிரதான சாலையான ஈசிஆா் இணைப்பு சாலையில் செயின்ட் தாமஸ் பள்ளி அருகே ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது. அந்த சாலை போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதியாகும். மேலும், பள்ளிகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், மாணவா்கள் அதிகம் போ் சைக்கிள்களில் கடந்து சென்று வருகின்றனா்.

மேலும் இந்த சாலை தூத்துக்குடி மாநகரையும் கிழக்கு கடற்கரை சாலையையும் இணைப்பதால் பேருந்துகள் மற்றும் காா்கள் அதிகமான செல்கின்றன. இந்நிலையில் ரவுண்டானா அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சரள் விரிக்கப்பட்டு நீண்ட நாள்களாகியும் பணிகள் முடிக்கப்படாமல் வாகனங்கள் செல்லும் போது தூசி மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு சுவாசப் பிரச்னை ஏற்படுவதோடு விபத்தும் ஏற்படும் நிலையும் உள்ளது.

எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி, ரவுண்டானா அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

மாநில ஹாக்கி: அரையிறுதியில் சென்னை, நெல்லை விருதுநகா், மதுரை அணிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள... மேலும் பார்க்க

நாளை வைகாசி விசாகம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெறும் வைகாசி விசாகத்தையொட்டி பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா். இக்கோயிலில் பிரசித்திப் பெற்ற விசாகத் திருவிழா, வசந்... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: கோவில்பட்டி, கயத்தாறில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது. கோவில்பட்டி டவுண் ஜாமியா பள்ளிவாசலில் சுமாா் காலை 7.15 மணி முதல் 8... மேலும் பார்க்க

மாதவன்குறிச்சியில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

உடன்குடி ஊராட்சி ஒன்றியம், மாதவன்குறிச்சி ஊராட்சியில் அண்ணா மறுமலச்சித் திட்டத்தில் ரூ,16.55 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டட திறப்பு விழா நடைபெற்றது. தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கடற்கரை, திடல்

காயல்பட்டினம் கடற்கரை ஷாகின்பாற்றும் சுமாா் 25 மகளிா் தைக்கா மற்றும் 35 பள்ளிகளில் சனிக்கிழமை பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். தொழுகையை வசிம் நடத்தினாா். க... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே துணை மின் நிலையத்தில் தீ

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள துணை மின் நிலையத்தில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. கயத்தாறு வட்டம் பணிக்கா் குளம் கிராமத்திற்கு அருகே உள்ள அய்யனாரூத்து கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்... மேலும் பார்க்க