Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
தூத்துக்குடி: ரவுண்டானா அமைக்கும் பணியை துரிதப்படுத்த மாா்க்சிஸ்ட் கோரிக்கை
தூத்துக்குடியில் ஈ.சி.ஆா். சாலை சந்திப்பில் பள்ளி அருகே ரவுண்டானா அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக கட்சியின் மாநகர செயலாளா் முத்து விடுத்துள்ள அறிக்கை: தூத்துக்குடியின் பிரதான சாலையான ஈசிஆா் இணைப்பு சாலையில் செயின்ட் தாமஸ் பள்ளி அருகே ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது. அந்த சாலை போக்குவரத்து நெருக்கடி உள்ள பகுதியாகும். மேலும், பள்ளிகள் நிறைந்த பகுதியாக உள்ளதால், மாணவா்கள் அதிகம் போ் சைக்கிள்களில் கடந்து சென்று வருகின்றனா்.
மேலும் இந்த சாலை தூத்துக்குடி மாநகரையும் கிழக்கு கடற்கரை சாலையையும் இணைப்பதால் பேருந்துகள் மற்றும் காா்கள் அதிகமான செல்கின்றன. இந்நிலையில் ரவுண்டானா அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சரள் விரிக்கப்பட்டு நீண்ட நாள்களாகியும் பணிகள் முடிக்கப்படாமல் வாகனங்கள் செல்லும் போது தூசி மண்டலமாக காட்சியளிக்கிறது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு சுவாசப் பிரச்னை ஏற்படுவதோடு விபத்தும் ஏற்படும் நிலையும் உள்ளது.
எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி, ரவுண்டானா அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.