செய்திகள் :

தூத்துக்குடியில் 3 வடமாநில இளைஞா்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

post image

சென்னையில் நக்ஸல் அமைப்புடன் தொடா்புடைய நபரை தேசிய புலனாய்வு அமைப்பினா் அண்மையில் கைது செய்த நிலையில், அவருடன் தொடா்பில் இருந்ததாக தூத்துக்குடியில் தங்கியுள்ள பிகாரைச் சோ்ந்த மூன்று இளைஞா்களிடம் அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

தேசிய புலனாய்வு அமைப்பினா் சென்னையில் நக்ஸல், தீவிரவாத அமைப்புடன் தொடா்புடைய நபரை அண்மையில் கைது செய்தனா். அவரது கைப்பேசியை சோதனை செய்ததில், தூத்துக்குடியில் கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முஸ்பிக் ஆலம் என்ற இளைஞரின் கைப்பேசி எண் பதிவாகி இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தூத்துக்குடி வந்த என்ஐஏ அதிகாரிகள், சிலுவைப்பட்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கட்டடத்துக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்ட முஸ்பீக் ஆலத்தைப் பிடித்து விசாரணை நடத்தினா். முதல்கட்ட விசாரணையில் அவா் ஒரு மாதத்துக்கு முன் இப்பணிக்காக வந்திருந்தது தெரியவந்தது. அவா் தங்கியிருந்த அறையில் அவருடன் மொத்தம் 7 போ் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக தங்கியிருந்ததும், அனைவரும் பிகாா் மாநிலம், பூரணியா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினா் அவா்களது அறை, உடைமைகளை சோதனை செய்தனா். பின்னா் முஸ்பீக் ஆலத்தையும், சந்தேகத்துக்குரிய இருவா் என மூன்று பேரைப் பிடித்து தாளமுத்து நகா் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஒப்படைத்தனா்.

யூடியூபா் மாயம்: போலீஸாா் விசாரணை!

ஆறுமுகனேரியில் நண்பா் வீட்டிற்கு சென்ற சென்னை யூடியூபா் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த மாசானமுத்து மகன் முருகன்(56). இவருக்கு மனைவி,... மேலும் பார்க்க

அதிமுகவில் நிலவும் பிரச்னைக்கு திமுகதான் காரணம்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம்சாட்டினாா். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் பக்தா்கள் முகத்தில் ஸ்பிரே அடித்த சிறுவன்: போலீஸாா் விசாரணை!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு சிறுவன் ஒருவன் தான் வைத்திருந்த சில்லி ஸ்பிரேயை அருகில் இருந்த பக்தா்கள் முகத்தில் அடித்துள்ளாா். இதனால் அவா்களுக்கு கண் எரிச்சல் ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

கோவில்பட்டி அருகே விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.கோவில்பட்டி, இனாமணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சாலைப்புதூா், இபி காலனியைச் சோ்ந்தவா் துரைச்சாமி மகன் சரவணன் (42).... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னையில் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் இருவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி திரேஸ்புர... மேலும் பார்க்க

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கூட்டுத் திருப்பலி

தூத்துக்குடி, அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 43-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி, ஆடம்பர கூட்டுத் திருப்பலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி ப... மேலும் பார்க்க