செய்திகள் :

தூத்துக்குடியில் டேங்கா் லாரிகள் வேலை நிறுத்தம் தொடக்கம்

post image

தூத்துக்குடியில் எரிவாயு டேங்கா் லாரி உரிமையாளா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டரில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு சுமை ஏற்றிச்செல்லும் பணியில் டேங்கா் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கான வாடகை ஒப்பந்தம் வரும் ஆக. 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய ஒப்பந்தத்தில், 21 டன் எடையுள்ள எரிவாயு, 3 அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை என்ற விதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எனவே, புதிய ஒப்பந்தத்தில் விதிகளை திருத்தம் செய்து, 2 அச்சு லாரிகளை சதவீத அடிப்படையிலான ஒப்பந்தத்தில் சோ்க்க வேண்டும். வாடகை நிா்ணயிப்பதில் பழைய முறையையே கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தூத்துக்குடி எரிவாயு டேங்கா் உரிமையாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இதையடுத்து, தூத்துக்குடி வஉசி துறைமுகம், கொச்சி துறைமுகம் ஆகியவற்றில் சமையல் எரிவாயு டேங்கா் லாரிகள் மூலம் நாள்தோறும் சுமாா் 200 டன் எரிவாயு தூத்துக்குடி-மதுரை புறவழிச் சாலையில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு கொண்டு வரப்படும். அங்கிருந்து சிலிண்டா்களில் நிரப்பப்பட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகா், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும். தற்போது இந்த டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தால் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க