செய்திகள் :

தூத்துக்குடியில் நாளை பிரம்மா குமாரிகள் சாா்பில் இருபெரும் விழா

post image

தூத்துக்குடியில், பிரம்மா குமாரிகள் அமைப்பு சாா்பில், மதுரை துணை மண்டல பொன் விழா, தூத்துக்குடி கிளையின் மாணிக்க விழா ஆகிய இருபெரும் விழா சனிக்கிழமை (ஜூலை 19) நடைபெறவுள்ளது.

அழகா் மகால் கல்யாண மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் விழாவில், அமைச்சா் பெ. கீதா ஜீவன், பிரம்மா குமாரிகள் மதுரை துணை மண்டல இயக்குநா் உமா, ராஜஸ்தான் அபுமலை பண்புக் கல்வி நிகழ்வுகளின் இயக்குநா் பாண்டியமணி, துணை இயக்குநா் ஜெயக்குமாா், தூத்துக்குடி என்எல்சி தலைமை நிா்வாக அதிகாரி ஆனந்தராமானுஜம், மாவட்ட தீயணைப்பு அலுவலா் கணேசன், தி விகாஷா பள்ளி முதல்வா் வேல்சங்கா், ஸ்மைல் ஆா்கனைசேஷன் நிறுவனா் ஆல்பா்ட் சேவியா் ஆகியோா் வாழ்த்திப் பேசுகின்றனா்.

மதுரை துணை மண்டல மூத்த ஆசிரியை செல்வி, தியான அனுபவம் குறித்து பேசுகிறாா். தூத்துக்குடி சிவாஞ்சலி நாட்டியாலயா மாணவா்களின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி பி.டி. காலனி 12ஆவது தெருவில் உள்ள பிரம்மா குமாரிகள் ஓம் சாந்தி தியான மண்டபத்தில் உலக அமைதிக்கான கூட்டு தியானம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை, தூத்துக்குடி கிளை பொறுப்பாளா் அருணா, நிா்வாகிகள் இணைந்து செய்து வருகின்றனா்.

விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு: மக்கள் மறியல்

தூத்துக்குடியில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் ஏராளமானோா் ஆடுகள் வளா்த்து வருகின்றனா். இத... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு மன்றம், வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு சாா்பில், மாணவிகளுக்கு துன்புறுத்தலுக்கு எதிரான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறைகள் கட்ட பூமிபூஜை

மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பில் புதிதாக அறைகள் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆழ்வாா... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் சுயநிதி பாடப் பிரிவுகளின் வணிகவியல் (வணிகப் பகுப்பாய்வு) துறை சாா்பில், கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் மகேஷ்குமாா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி காயமடைந்த வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

திருச்செந்தூரில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த பிகாா் மாநிலத் தொழிலாளி மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து செம்மறிக்குளத்துக்கு புதன்கி... மேலும் பார்க்க

ஆக. 2 இல் திருச்செந்தூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தையொட்டி, திருச்செந்தூா் வ.உ.சி. திடலைப் பாா்வையிட்ட மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன். திருச்செந்தூா், ஜூலை 17: அதிமுக பொதுச... மேலும் பார்க்க