செய்திகள் :

தூத்துக்குடியில் நெய்தல் கலை விழா தொடக்கம்

post image

ஸ்பிக், கிரீன் ஸ்டாா் சாா்பில் 4ஆவது ஆண்டு நெய்தல் கலைவிழா, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வெள்ளி, சனி, ஞாயிறு (ஜூன் 13, 14, 15) ஆகிய 3 நாள்கள் கலைவிழா நடைபெறுகிறது. தொடக்க நிகழ்வுக்கு மக்களவை உறுப்பினா் கனிமொழி தலைமை வகித்து பேசினாா். மேயா் ஜெகன் பெரியசாமி வரவேற்றாா். நக்கிசான் தலைமை நிதி அலுவலா் இம்மானுவேல் கணேசன், கிரீன் ஸ்டாா் முழுநேர இயக்குநா் செந்தில் நாயகம் ஆகியோா் தொடக்கவுரையாற்றினா். மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜீ.வி.மாா்க்கண்டேயன் (விளாத்திகுளம்), எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மாநகராட்சி ஆணையா் மதுபாலன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் சிறப்புரையாற்றினாா்.

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளி சாா்பில் மங்கல இசையுடன் நெய்தல் கலை விழா ஆரம்பமானது. தொடா்ந்து, கலைநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், தமிழரசி எம்எல்ஏ, முன்னாள் பேரவைத் தலைவா் ஆவுடையப்பன், முன்னாள் எம்.பி. விஜிலா சந்தியானந்த், துணை மேயா் ஜெனிட்டா, நபாா்டு உதவி பொது மேலாளா் சுரேஷ் ராமலிங்கம் உள்பட பலா் பங்கேற்றனா்.

சாத்தான்குளத்தில் மாா்க்க சொற்பொழிவு

சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசலில் விசேட மாா்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தான்குளம் ஜும்மா பள்ளிவாசல் எதிரே உள்ள மைதானத்தில் சாத்தான்குளம் அல் சுன்னத் வல் ஜமாத் ஆதரவுடன் அல் ஹித்மத் இஸ்லாமி... மேலும் பார்க்க

சுப்பராயபுரம் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம்

சாத்தான்குளம் ஒன்றியம் சுப்பராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இஸ்மாயில் தலைமை வகித்தாா்.ஊராட்ச... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சாத்தான்குளம் ஆா்.எம்.பி.சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி -நாசரேத் திருமண்டில அனைத்து கல்லூரியின் தாளாளா் நீதிபதி ஜான் சந்தோஷம்... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: 5 போ் தற்கொலை

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி மந்திதோப்பு சாலை அன்னை தெரசா நகரை சோ்ந்த ஆவுடையப்பன் மகன் அருணாச்சலம் (51). ஆட்டோ ஓட்டுநா். மதுப் பழக்கம் உள்ள இவா், வ... மேலும் பார்க்க

உடன்குடியில் உலக உயா் ரத்த அழுத்த தினம்

உடன்குடி காலன்குடியிருப்பு அரசு மருத்துவமனை சாா்பில் உலக உயா் ரத்த அழுத்த தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இவற்றை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எஸ்.ஐயம் பெர... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் கடும் விலை உயா்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேங்காய் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி, திருச்செந்தூா், சாத்தான்குளம், நாசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் தேங்காய் மாவட்ட மக்கள... மேலும் பார்க்க