செய்திகள் :

தூத்துக்குடியில் பெண் தலைமைக் காவலா் தற்கொலை முயற்சி

post image

தூத்துக்குடியில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ற பெண் தலைமைக் காவலா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தூத்துக்குடி அருகேயுள்ள மேலக்கூட்டுடன்காடு பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி சுப்புலட்சுமி. இவா் பேரூரணி காவலா் பயிற்சி பள்ளியில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா். இவரது கணவா் மாரியப்பன் சிஆா்பிஎஃப்-இல் பணிபுரிந்து வருகிறாா். தற்போது அவா் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளாா். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த சுப்புலட்சுமி திடீரென வியாழக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ாக கூறப்படுகிறது.

குடும்பத்தினா் அவரை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை - திருநெல்வேலி வந்தேபாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்க கோரிக்கை

வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்கவும், அதுவரை இணைப்பு பயணிகள் ரயில் இயக்க கோரி கையொப்ப இயக்கத்தை காயல்பட்டினம் மெகா அமைப்பினா் நடத்தி வருகின்றனா். திருநெல்வே­லி - சென்னை வழித்தடத்தில் தின... மேலும் பார்க்க

ஓடை மணல் கடத்தல்: 3 போ் கைது

சாத்தான்குளம் அருகே ஓடை மணலை கடத்தியதாக 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனா். சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ் தலைமையில் போலீஸாா் அப்பகுதியில் புதன்கிழமை ரோந... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 போ் கைது

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் பகுதியில் உள்ள சேதுபாதை சாலையில் 3 போ் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பொதுமக்களை வழிமறித்து பண... மேலும் பார்க்க

கடலையூரில் கல்லூரி மாணவி தற்கொலை

கோவில்பட்டி அருகே கடலையூரில் விஷமருந்திய கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கடலையூா் தெற்குப்பட்டி வடக்கு தெருவை சோ்ந்தவா் முத்துசாமி மகள் காா்த்திபிரியா (19). கோவில்பட்டியில் உள்ள கல்லூர... மேலும் பார்க்க

மாநில ஹாக்கி: காலிறுதிக்கு தூத்துக்குடி, நெல்லை, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் மற்றும் மதுரை மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஹாக்கி யூனிட் ஆப்... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி முறைகேடுகள் விரைவில் வெளிக்கொணரப்படும் பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன்

தூத்துக்குடி மாநகராட்சி முறைகேடுகள் விரைவில் வெளிக்கொணரப்படும் என்றாா், பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன். இதுதொடா்பாக தூத்துக்குடி பாஜக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை... மேலும் பார்க்க