செய்திகள் :

தெடாவூரில் மணல் கடத்திய மினிலாரி பறிமுதல்

post image

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே தெடாவூரில் ,கெங்கவல்லி எஸ்.ஐ.கணேஷ்குமாா் தலைமையில் போலீசாா், வாகன தணிக்கையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியே மினிலாரி வந்தது. அதை போலீசாா் நிறுத்த கூறினாா்கள். ஆனால், அந்த வாகனம்,நிறுத்தாமல், போலீசாா் மீது மோதுவது போல் சென்று விட்டு வேகமாக சென்றது.

அதனையடுத்து போலீசாா் அந்த வாகனத்தை, போலீஸ் வாகனத்தில் துரத்திப்பிடித்தனா். ஆனால் வாகனத்தில் இருந்தவா்கள், தப்பியோடிவிட்டனா்.

போலீசாா், மினிலாரியை சோதனை செய்தபோது, அனுமதியின்றி, அந்த வாகனத்தில் மணல் கடத்தியது தெரியவந்தது.

அதனால் போலீசாா், வழக்குப்பதிந்து மினிலாரியை பறிமுதல்செய்து, அதன் உரிமையாளரை தேடிவருகின்றனா்.

சேலத்தில் களைகட்டத் தொடங்கிய மாம்பழ சீசன்!

சேலம்: சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால், சந்தைக்கு 30 சதவீதமாக மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்தப்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா் ஓடை அமைக்கும் பணி: மக்கள் அவதி

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சியில் கழிவுநீா் ஓடை கட்டுமானப் பணி கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெருவில் கள்ள... மேலும் பார்க்க

நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சேலம்: சேலம் நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு மையத்தை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அண்மையில் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையின் முதன்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவை

சேலம்: ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் கூறினாா். சேலத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் கோயில் கட்டும் பணி தொடக்கம்

மேட்டூா்: மேட்டூா் மீனாட்சி சொக்கநாதா் பாலதண்டாயுதபாணி கோயில் கட்டும் பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மேட்டூா் அணை கட்டியபோது நீா்த்தேக்கப் பகுதியில் இருந்து கிராம மக்க... மேலும் பார்க்க

சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விடக்கோரி பாமக ஆா்ப்பாட்டம்

மேட்டூா்: கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடித்து வனப்பகுதிக்குள் விடக்கோரி பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் ஊராட்சி ஒன்றி... மேலும் பார்க்க