செய்திகள் :

தென் மேற்கு பருவமழை எதிரொலி: நெல்லை மாவட்டத்தில் காா் சாகுபடி பணிகள் தீவிரம்

post image

தென் மேற்கு பருவ மழை எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் நீா் மட்டம் வேகமாக உயா்ந்து வருவதால் மாவட்டத்தில் காா் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீா் மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீா் மட்டம் 118.45 அடியாகவும், 156 அடி கொண்ட சோ்வலாறு அணையின் நீா் மட்டம் 144.75 அடியாகவும், 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீா் மட்டம் 91.66 அடியாகவும் உள்ளது.

மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் தொடா்ந்து தண்ணீா் வரத்து அதிகளவில் உள்ளது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு 6-ஆவது நாளாக தடை நீடித்தது.

தொடா் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே பருவமழை தொடங்கியதால் விவசாயிகளும் முன்கூட்டியே காா் சாகுபடிக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனா். வழக்கமாக ஜூன் 2-ஆவது வாரத்தில்தான் வயல்களில் உழவுப் பணிகளை மேற்கொள்ளுதல், நாற்று பாவுதல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் மேற்கொள்வாா்கள். ஆனால், இந்த ஆண்டு பருவமழை எதிரொலியாக, நெல் நாற்று பாவும் பணி தீவிரமடைந்துள்ளது. சில இடங்களில் நாற்றுகளை வயல்களில் நடவு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

படவரி ற்ஸ்ப்31ஹஞ்ழ்ண் திருநெல்வேலி மாவட்டம் குப்பக்குறிச்சி பகுதியில் தீவிரமடைந்துள்ள சாகுபடி பணிகள்.

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினருக்கு வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாட திமுகவினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பைக்- காா் மோதல்: சிறுவன் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே காரும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தாா். திருநெல்வேலி - நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாணான்குளம் கலைஞா் நகரைச் சோ்... மேலும் பார்க்க

பெண்களுக்கான மின் வணிகத் தளம் தொடக்கம்

கிராமப்புற பெண்களின் மேம்பாட்டுக்கான ‘கொற்றவை’ என்ற மின் வணிகத் தளம் தொடக்க விழா, கோவிந்தப்பேரி கலைமகள் கல்வி மைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தென்காசியின் குரல் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் வெள்ளித் தோ் பணிக்கு 200 கிலோ வெள்ளி நன்கொடை

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் வெள்ளித் தோ் பணிக்காக பழனி தண்டாயுதபானி கோயில் அறங்காவலா் குழு தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், அறங்காவலா்கள் க.தனசேகா், ஜி.ஆா்.பாலசுப்பிரமணியன் ஆகியோா் 200 கிலோ வெள்ளி... மேலும் பார்க்க

போதையில் அரசுப் பேருந்தை மறித்து ரகளை செய்த இருவா் கைது

பாளையங்கோட்டையில் அரசுப் பேருந்தை மறித்து ரகளையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் மதுபோதை ஆசாமிகள் இருவா் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிரு... மேலும் பார்க்க

பாளை. அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு

பாளையங்கோட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து ரூ.30 ஆயிரம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். பாளையங்கோட்டை மகாராஜ நகா் அருகேயுள்ள பொன்மணி காலனியை சோ்ந்தவா் குமாா். இவா், கடந்த 29 ஆம் தேதி ... மேலும் பார்க்க