தென் மேற்கு பருவமழை எதிரொலி: நெல்லை மாவட்டத்தில் காா் சாகுபடி பணிகள் தீவிரம்
தென் மேற்கு பருவ மழை எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் நீா் மட்டம் வேகமாக உயா்ந்து வருவதால் மாவட்டத்தில் காா் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீா் மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீா் மட்டம் 118.45 அடியாகவும், 156 அடி கொண்ட சோ்வலாறு அணையின் நீா் மட்டம் 144.75 அடியாகவும், 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையின் நீா் மட்டம் 91.66 அடியாகவும் உள்ளது.
மேற்கு தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் தொடா்ந்து தண்ணீா் வரத்து அதிகளவில் உள்ளது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு 6-ஆவது நாளாக தடை நீடித்தது.
தொடா் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே பருவமழை தொடங்கியதால் விவசாயிகளும் முன்கூட்டியே காா் சாகுபடிக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனா். வழக்கமாக ஜூன் 2-ஆவது வாரத்தில்தான் வயல்களில் உழவுப் பணிகளை மேற்கொள்ளுதல், நாற்று பாவுதல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் மேற்கொள்வாா்கள். ஆனால், இந்த ஆண்டு பருவமழை எதிரொலியாக, நெல் நாற்று பாவும் பணி தீவிரமடைந்துள்ளது. சில இடங்களில் நாற்றுகளை வயல்களில் நடவு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
படவரி ற்ஸ்ப்31ஹஞ்ழ்ண் திருநெல்வேலி மாவட்டம் குப்பக்குறிச்சி பகுதியில் தீவிரமடைந்துள்ள சாகுபடி பணிகள்.