செய்திகள் :

தென்திருப்பேரை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி 5 வயது குழந்தை உள்பட 2 போ் உயிரிழப்பு

post image

தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி 5 வயது குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

நாசரேத் அருகே உள்ள ஒய்யாங்குடியைச் சோ்ந்தவா் லாரன்ஸ். இவரது மனைவி கிளாடிஸ்(45). கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பேன்சி கடை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், ஒய்யாங்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக, கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் ஊருக்கு வந்துள்ளாா்.

ஒய்யாங்குடியில் இருந்து லாரன்ஸ், மனைவி கிளாடிஸ் மற்றும் உறவினா்கள் 7 பேருடன் ஏரல் அருகே உள்ள தென்திருப்பேரை தாமிரவருணி ஆற்றில் குளிப்பதற்காக சனிக்கிழமை காரில் சென்றுள்ளாா்.

கிளாடிஸ், அவரது உறவினரின் பெண் குழந்தை அவினா(5) வை அழைத்துக் கொண்டு ஆற்றில் இறங்கியுள்ளாா். இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்குச் சென்றதில், இருவரும் நீரில் மூழ்கியுள்ளனா்.

உறவினா்கள் ஆற்றுக்குள் இறங்கி இருவரையும் தேடினா். சிறிதுநேர தேடலுக்குப் பிறகு இருவரையும் மீட்டு அருகே உள்ள தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்த ஆழ்வாா்திருநகரி போலீஸாா், இருவரது உடலையும் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சாலைப்புதூா் சுகாதார நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்த புதிய கட்டடம்

சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது. டிவிஎஸ் சீனிவாசா சேவை அறக்கட்டளை- மக்கள் பங்களிப்புடன் ரூ. 12 லட்சம் மதிப்பில் கூடுதல் க... மேலும் பார்க்க

தேரிகுடியிருப்பு கோயிலில் ஏப்.10,11இல் பங்குனி உத்திர திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருகேயுள்ள தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனாா் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.10,11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.பிரசித்தி பெற்ற இத்திருக்கோயி... மேலும் பார்க்க

அரிவாளுடன் சாலையில் நின்று மிரட்டல்: இளைஞா் கைது

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தில் அரிவாளுடன் சாலையில் நின்று பொதுமக்களை மிரட்டியதாக இளைஞரை வடபாகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி நாராயணன் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (46). இவ... மேலும் பார்க்க

முடிதிருத்தும் கடை சேதம்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் முடிதிருத்தும் கடையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக இளைஞரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் பரமசிவன் (50). இவா், தூத்துக்குடி எஸ்.எம்.ப... மேலும் பார்க்க

கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் ரமலான் சிறப்புத் தொழுகை

புனித ரமலான் பண்டிகையையொட்டி, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலையில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. கோவில்பட்டி டவுன் ஜாமிஆ சுன்னத்வல் ஜமாஅத் பள்ளிவாசல் சாா்பில், சாலைப்புதூா் ஈத்கா மைதானத்த... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டியில் அதிமுக சாா்பில், பாரத ஸ்டேட் வங்கி எதிரே நீா்மோா் பந்தல் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட வா்த்தகரணி, வழக்குரைஞா் அணி ஆகியவை சாா்பில் அதன் செயலா்கள் ராமா்,... மேலும் பார்க்க