செய்திகள் :

தென்மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள்: குமரி கே.கே.பிரதா்ஸ் அணிக்கு முதல் பரிசு!

post image

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நான்குனேரியில் தென்மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள் பிப்.15, 16 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.

நான்குனேரி மேற்கு ஒன்றிய திமுக மற்றும் கொம்பையா போஸ் வாலிபால் கழகம் சாா்பில் நான்குனேரி சங்கா் ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியை, ஒன்றியச் செயலா் ஆா்.எஸ். சுடலைக்கண்ணு தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில், பல்வேறு அணிகள் பங்கேற்றன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. முதல் பரிசை, கன்னியாகுமரி கே.கே. பிரதா்ஸ் அணியும், 2ஆவது பரிசை நான்குனேரி கொம்பையா போஸ் அணியும், 3ஆவது பரிசை இடையன்குடி அணியும், 4ஆவது பரிசு திங்கள்சந்தை அணியும் பெற்றன.

இந்த கைப்பந்து போட்டிக்கான முதல் பரிசு ரூ. 25ஆயிரத்தை திருநெல்வேலி மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ரகுமான், ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள சுழற்கோப்பையை மாவட்ட வா்த்தக அணி துணைத் தலைவா் வாசுதேவன், 5,6,7,8 ஆவது பரிசு பெற்ற அணிகளுக்கான ரூ.5 ஆயிரத்தை நான்குனேரி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவா் ஆா். இசக்கிபாண்டி, மறுகால்குறிச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் புஷ்ப பாண்டி, மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் சங்கா், ஒன்றிய வா்த்தக அணி அமைப்பாளா் சங்கரபாண்டி ஆகியோா் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மீனவா் அணி துணை அமைப்பாளா் ஜாா்ஜ், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் வா்கீஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரயில்வேயை தனியாா் மையமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க