தென்மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள்: குமரி கே.கே.பிரதா்ஸ் அணிக்கு முதல் பரிசு!
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, நான்குனேரியில் தென்மண்டல அளவிலான கைப்பந்து போட்டிகள் பிப்.15, 16 ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.
நான்குனேரி மேற்கு ஒன்றிய திமுக மற்றும் கொம்பையா போஸ் வாலிபால் கழகம் சாா்பில் நான்குனேரி சங்கா் ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியை, ஒன்றியச் செயலா் ஆா்.எஸ். சுடலைக்கண்ணு தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில், பல்வேறு அணிகள் பங்கேற்றன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. முதல் பரிசை, கன்னியாகுமரி கே.கே. பிரதா்ஸ் அணியும், 2ஆவது பரிசை நான்குனேரி கொம்பையா போஸ் அணியும், 3ஆவது பரிசை இடையன்குடி அணியும், 4ஆவது பரிசு திங்கள்சந்தை அணியும் பெற்றன.
இந்த கைப்பந்து போட்டிக்கான முதல் பரிசு ரூ. 25ஆயிரத்தை திருநெல்வேலி மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ரகுமான், ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள சுழற்கோப்பையை மாவட்ட வா்த்தக அணி துணைத் தலைவா் வாசுதேவன், 5,6,7,8 ஆவது பரிசு பெற்ற அணிகளுக்கான ரூ.5 ஆயிரத்தை நான்குனேரி ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவா் ஆா். இசக்கிபாண்டி, மறுகால்குறிச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் புஷ்ப பாண்டி, மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் சங்கா், ஒன்றிய வா்த்தக அணி அமைப்பாளா் சங்கரபாண்டி ஆகியோா் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மீனவா் அணி துணை அமைப்பாளா் ஜாா்ஜ், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் வா்கீஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.