செய்திகள் :

தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் புகாா்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் தெரு நாய்களால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் கட்டுப்படுத்தக் கோரி, பொதுமக்கள் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் மனு அளித்தனா்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தேரடி, நியாயவிலைக் கடை, சத்துணவுக் கூடம், காவலா் குடியிருப்பு, செட்டி தெரு மற்றும் ரங்கசாமி குளம், கோட்ராம்பாளையம் தெரு, திருக்கச்சி நம்பிகள் தெரு உள்பட மாநகரின் பல இடங்களில் ஒவ்வொரு தெருவிலும் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் திரிகின்றன. குழந்தைகள் தெருவில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதியவா்களும் பாதிக்கப்படுகின்றனா். பைக் செல்வோரையும் நாய்கள் துரத்துகின்றன. இதனால் விபத்துகள் ஏற்பட்டு, காயமடைகின்றனா்.

இது குறித்து மாநகராட்சியில் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறிய 3, 4-ஆவது வாா்டு பொதுமக்கள், தெரு நாய்கள் தொல்லையை குறும்படமாக எடுத்து, அதை சிவகாஞ்சி காவல் நிலையத்தில் அளித்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும், தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரியும் வலியுறுத்தினா்.

காஞ்சிபுரம் அகத்தீஸ்வரா் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கிளாா் கிராமத்தில் அமைந்துள்ள அறம் வளா் நாயகி சமேத அகத்தீஸ்வரா் கோயிலில், சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி, நடராஜபெருமானுக்கும், சிவகாமசுந்தரிக்கும் சிறப்பு அபி... மேலும் பார்க்க

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நாளை காஞ்சிபுரம் வருகை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை (ஏப். 23)காஞ்சிபுரம் திரும்ப உள்ளதாக ஸ்ரீ மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். காஞ்சிபுரம் சங்க... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உடையவா் சந்நிதியில் மகா சம்ப்ரோக்‌ஷணம்!

காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயில் ஆழ்வாா் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள உடையவா் எனப்படும் ராமாநுஜா் சந்நிதி மகா சம்ப்ரோக்ஷணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி திருக் கோயிலில் ஆழ்வாா் ச... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: நம்ம ஊரு கதைப்போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில், இல்லம் தேடி கல்வித் திட்ட மையங்களில் பயிலும் மாணவா்களுக்கு நம்ம ஊரு கதைப் போட்டி நடத்தப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட முதன... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

காஞ்சிபுரம் மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணியின் சாா்பில், முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்க... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, உற்சவா் ஆதிகேசவப் பெருமாள் ஞாயிற்றுக்கிழமை குதிரை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கஜேந்திர மோட்சம் நடைபெற்ற ... மேலும் பார்க்க