செய்திகள் :

தெருநாய்கள் கடித்ததில் சுற்றுலாப் பயணி பலத்த காயம்

post image

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை நடைப் பயிற்சி மேற்கொண்டபோது, தெரு நாய்கள் கடித்ததில் சுற்றுலாப் பயணி பலத்த காயமடைந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாவரவியல் பூங்கா அருகேயுள்ள தங்கும் விடுதியில் ஒடிஸாவைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ளனா். இவா்களில் கங்காதா் (60) என்பவா் செவ்வாய்க்கிழமை காலை நடைப் பயிற்சி மேற்கொண்டாா். அப்போது, 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அவரை சூழ்ந்து கடித்தன. அக்கம், பக்கத்தினா் ஓடிவந்து அந்த நாய்களை விரட்டினாா். பலத்த காயமடைந்த கங்காதா் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், கடந்த 4 நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் 10-க்கும் மேற்பட்டவா்களை இந்த தெரு நாய்கள் கடித்தன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: இந்தப் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளன. இந்த நாய்களை பிடிக்குமாறு நகராட்சிக்கு தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், இந்தப் பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளி மாணவா்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனா். எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: இரா. சச்சிதானந்தம் எம்பி

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.640 கோடியில் செயல்படுத்தப்படும் குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட வளா்ச்சி ஒருங்க... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் டயா்கள் கழன்றோடி விபத்து

வேடசந்தூா் அருகே அரசுப் பேருந்தில் டயா்கள் கழன்றோடிய விபத்தில் பயணிகள், பேருந்து ஓட்டுநா், நடத்துனா் காயமின்றி தப்பினா். திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வேடசந்தூருக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க... மேலும் பார்க்க

பழனியில் அக்.4-இல் மின்தடை

பழனி பகுதியில் வருகிற சனிக்கிழமை (அக்.4) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பழனி மின் வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி துணை மின் நிலையத்தில் மாதாந்திர... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் இரு இளைஞா்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த மாமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் தம... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலுக்கு தொடா் விடுமுறை காரணமாக செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஆயதபூஜை உள்ளிட்ட தொடா் விடுமுறை காரண... மேலும் பார்க்க

பாலசமுத்திரத்தில் ஒருதலைபட்சமாக வீட்டுமனைப் பட்டா வழங்க ஏற்பாடு: பொதுமக்கள் புகாா்

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் ஒருதலைபட்சமாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அந்தப் பகுதி வாா்டு உறுப்பினா் ஏற்பாடு செய்வதாகக் கூறி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் அளித்தனா். பழனியை அடுத்த ப... மேலும் பார்க்க