செய்திகள் :

தெற்கு சூடானில் படைகளை இறக்கிய உகாண்டா!

post image

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் உகாண்டா நாட்டு படைகள் தரையிறக்கப்பட்டுள்ளதாக உகாண்டாவின் ராணுவத் தளபதி முஹூசி கைனெருகபா தெரிவித்துள்ளார்.

தெற்கு சூடான் நாட்டு அதிபர் சால்வா கீர் மற்றும் அவரது துணை அதிபரான ரெயிக் மச்சார் ஆகியோருக்கு இடையிலான உறவில் விரிசல் உண்டானதினால், அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தம் முறிந்து மீண்டும் மோதல் வெடிக்கும் அபாயம் நிலவி வருகின்றது.

இந்நிலையில், அண்டை நாடான உகாண்டாவின் ராணுவம் தெற்கு சூடான் தலைநகர் ஜீபாவில் அதிபர் சால்வாவிற்கு உதவுவதற்காக தரையிறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்று.

இதற்கான காரணம் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி ஜென்ரல் முஹூசி கூறுகையில், அதிபர் சால்வாவிற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் உகாண்டா மீதான போராகக் கருதப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தெற்கு சூடானை தங்களுடைய நாடு போல பாதுகாப்போம் எனவும் அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ரூ.20,000 கோடியில் ஒரு லட்சம் பேர் அமரும் புதிய கால்பந்து திடல்!

இருப்பினும், இந்த நடவடிக்கை குறித்து தெற்கு சூடானின் அரசு தரப்பில் எந்தவொரு கருத்தும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த வாரம் துணை அதிபர் மச்சாரின் கூட்டாளிகளான அந்நாட்டு ராணுவத் துணைத் தளபதி மற்றும் 2 அமைச்சர்கள் ஆகியோர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்தரப்பில் கடுமையான கண்டங்கள் எழுந்ததைத் தொடர்ந்து ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கைகள் அனைத்தும் மேல் நைல் மாநிலத்தில் அரசுப் படைகளுக்கும் வெள்ளை இராணுவம் என்று அழைக்கப்படும் ஒரு போராளிக் குழுவிற்கும் இடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.

இதனால், கடந்த மார்ச்.8 அமெரிக்கா தெற்கு சூடானில் பணிப்புரியும் அமெரிக்கர்களில் அவசரக்கால ஊழியர்களை தவிர மற்றவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆற்றின் முகத்துவாரம் தோண்டுவதில் மோதல்! 40 கிராமவாசிகள் கைது!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் ஆற்றின் முகத்துவாரம் தோண்டப்பட்ட விவகாரத்தில் இரண்டு கிராமங்களுக்கிடையே வெடித்த மோதலினால் 40 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சம் மாவட்டத்தில் ராமாய... மேலும் பார்க்க

துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு நாய்! உரிமையாளர் படுகாயம்!

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் வளர்ப்பு நாயால் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உரிமையாளர் படுகாயமடைந்துள்ளார். டென்னிசி மாகணத்தைச் சேர்ந்தவர் ஜெரால்டு கிர்க்வுட், இவர் தனது வீட்டில் ஓரியோ எனப் பெயர... மேலும் பார்க்க

நாடு கடத்தப்பட்டு மீண்டும் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 3 பேர் கைது!

இந்தியாவிலிருந்து அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டு மீண்டும் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 3 பேர் புது தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 10 அன்று காவல் துறையினருக்கு கிடைத... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையினரின் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 3 வீரர்கள் பலி! 13 பேர் படுகாயம்!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 3 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர். சேனாபதி மாவட்டத்திலுள்ள சங்கோபங் கிராமத்தின் அருகில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் செ... மேலும் பார்க்க

அதிபரின் நன்கொடையால் வெடித்த மோதல்!

கென்யா நாட்டு அதிபர் தேவாலயத்திற்கு அளித்த நிதியுதவியினால் அந்நாட்டில் மோதல் வெடித்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் அதிபர் வில்லியம் ரூட்டோ அந்நாட்டின் தலைநகர் நைரோபியிலுள்ள ஜீசஸ் வின்னர் ... மேலும் பார்க்க

மாணவர்கள் மற்றும் ஆசிரியர் வேடமிட்டு லண்டன் செல்ல முயன்ற 8 பேர் கைது!

மகாராஷ்டிரத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் போல் வேடமிட்டு சட்டவிரோதமாக லண்டன் செல்ல முயன்ற 8 பேர் மும்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்த... மேலும் பார்க்க