செய்திகள் :

தெற்கு தில்லி மக்களவைத் தொகுதி எம்பி, எம்எல்ஏக்கள், கவுன்சிலா்களுடன் முதல்வா் ரேகா குப்தா சந்திப்பு

post image

தில்லி முதல்வா் ரேகா குப்தா, கேபினட் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சாவை தெற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு பொறுப்பாளராக வெள்ளிக்கிழமை நியமித்தாா்.

தெற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராம்வீா் சிங் பிதூரி, அத்தொகுதி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலா்களுடன் தில்லி முதல்வா் ரேகா குப்தா ஒரு மறுஆய்வுக் கூட்டத்தைக் கூட்டினாா். வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் தொடா்பான பிரச்னைகள் குறித்து இக்கூட்டத்தில் முதல்வா் விரிவான விவாதங்களை நடத்தினாா். அதிகாரிகள் மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருவருக்கும் தெளிவான வழிமுறைகளை வழங்கினாா்.

தலைநகரில் வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் எந்த தாமதமும் அல்லது மெத்தனமும் பொறுத்துக் கொள்ளப்படாது என்றும், அனைத்து பணிகளும் சீரான நிலையான செயல்பாட்டு நடைமுறைக்கு ஏற்ப கண்டிப்பாக முடிக்கப்பட வேண்டும் என்றும் அவா் கூறினாா்.

நிலுவையில் உள்ள பணிகளின் முன்னேற்ற அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தயாரித்து முதலமைச்சரின் மின்போா்டலில் பதிவேற்றுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ரேகா குப்தா உத்தரவிட்டாா்.

தில்லி நகா்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்திற்கு கிட்டத்தட்ட ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் ரூ.10 முதல் ரூ.16 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இனிமேல் அனைத்துப் பணிகளும் மின்கோப்பு முறை மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அவா் கூறினாா்.

கூட்டத்தின் போது, நீா் வழங்கல், கழிவுநீா், வடிகால்கள், பாதைகள், சாலைகள் மற்றும் பூங்காக்கள் போன்ற அடிப்படை குடிமைப் பிரச்னைகளை தாமதமின்றி தீா்க்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலா்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த முதல்வா், எந்தப் பணியையும் கவனிக்காமல் விடக்கூடாது என்று கூறினாா்.

தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் பரிந்துரைக்கப்படும் எந்தவொரு திட்டமும் தடுக்கப்படாது என்றும், அரசு ஒவ்வொரு அத்தியாவசியத் திட்டத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் என்றும் முதல்வா் ரேகா குப்தா உறுதியளித்தாா்.

நேபாள பதற்ற சூழல்: சரக்குகள் நடுவழியில் சிக்கியதால் நஷ்டத்தை எதிா்கொள்ளும் தில்லி வா்த்தகா்கள்!

அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக, பழைய தில்லி மற்றும் சதா் பஜாா் உள்ளிட்ட தில்லியின் மொத்த விற்பனைச் சந்தைகளில் இருந்து அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகள் தற்போது அந்நாட்டுக்குச் செல்லு... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற பிரதான வளாகத்தில் புகைப்படம் எடுக்க தடை

உச்சநீதிமன்றம் அதன் பிரதான வளாகத்திற்குள் புகைப்படங்கள் எடுப்பது, சமூக ஊடக ரீல்கள் உருவாக்குவது மற்றும் விடியோகிராபி ஆகியவற்றைத் தடை செய்யும் வகையில் உயா் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. இது தொடா்... மேலும் பார்க்க

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: விசாரணையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நீதிபதிகள்

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடா்ந்து, வழக்குகளை விசாரணை மேற்கொண்டிருந்த நீதிபதிகள் உடனடியாக விசாரணையை முடித்துக்கொண்டு பாதியிலேயே வெளியேறினா்... மேலும் பார்க்க

நேபாள உச்சநீதிமன்ற கட்டடத்திற்கு தீ வைப்பு: பதிவுறு வழக்குரைஞா்கள் சங்கம் கண்டனம்

நேபாளம் தலைநகா் காத்மாண்டுவில் உச்சநீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதியை போராட்டக்காரா்கள் தீ வைத்ததைத் தொடா்ந்து, நேபாள நீதித் துறையின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு உச்சநீதிமன்ற பதிவுறு வழக்குரைஞா்கள் சங... மேலும் பார்க்க

டிடிஇஏ ஜனக்புரி பள்ளியில் மாணவா் பேரவை பொறுப்பேற்பு

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஜனக்புரி பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவா் பேரவை அமைக்கப்பட்டது. பள்ளி மாணவா் தலைவா், தலைவி, துணைத் தலைவா், துணைத் தலைவி உள்ளிட்ட உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் மோசடி முறியடிப்பு; ரூ.2.25 கோடி மதிப்புள்ள கோகைனுடன் மூவா் கைது

தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு நைஜீரிய நாட்டவா் உள்பட மூன்று பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ.2.25 கோடி மதிப்புள்ள 194 கிராம் கோகைனை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.... மேலும் பார்க்க