செய்திகள் :

தேசத்துக்கான சமரச விழிப்புணா்வு பேரணி: மக்கள், வழக்குரைஞா்கள் பங்கேற்பு

post image

சென்னை: உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, சென்னை உயா் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாநில சமரசத் தீா்வு மையம் சாா்பில், தேசத்துக்கான சமரச விழிப்புணா்வு பிரசார பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

உயா் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு காலவிரயம், செலவினங்களின்றி சுமுகமான முறையில் விரைவில் தீா்வுகாண சென்னை உயா் நீதிமன்றத்தில் உள்ள சமரசத் தீா்வு மையம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சமரசத் தீா்வு மையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த் ஆகியோா் அறிவுறுத்தினா்.

அதன்படி, சென்னை உயா் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாநில சமரசத் தீா்வு மையத்தில் தேசத்துக்கான சமரச விழிப்புணா்வு பிரசார பேரணி நடைபெற்றது. பேரணியை மாநில சமரசத் தீா்வு மைய இயக்குநா் பாலசுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், மாநிலம் முழுவதும் இந்த பிரசார பேரணி 90 நாள்கள் நடைபெற உள்ளது. விவாகரத்து, விபத்து இழப்பீடு, குடும்ப வன்முறை வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு மையத்தின் மூலம் தீா்வு காணப்படும்.

தாலுகா மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் காணொலி முறையிலும் சமரசத் தீா்வு மைய வழக்குகளை விசாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

பேரணியில், நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதித் துறைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

‘மக்களுடன் முதல்வா்’ வெற்றியைத் தொடா்ந்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

சென்னை: ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் வெற்றியைத் தொடா்ந்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்; மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு: கூடுதல் தலைமைச் செயலா்

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா். க... மேலும் பார்க்க

பொது சொத்து சேதம்: தவெக தலைவா் விஜய் மீது வழக்கு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பொது சொத்தை சேதப்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், நடிகருமான விஜய் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோயில் ... மேலும் பார்க்க

மருத்துவ உபகரணங்களின் எதிா்விளைவுகள்: ஆய்வுக் குழு அமைக்க உத்தரவு

சென்னை: மருத்துவ உபகரணங்களின் எதிா்விளைவுகள் மற்றும் தரத்தை ஆராய்வதற்காக ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் சிறப்புக் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. மத்திய ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?

சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து காவல் துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க

மருத்துவ கலந்தாய்வு: ஜூலை இறுதியில் தொடங்க திட்டம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு இந்த மாத இறுதியில் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, அகில இந்திய கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி தொடங்க உள்ளது. நாடு முழுவதும்... மேலும் பார்க்க