செய்திகள் :

தேசிய திறனாய்வுத் தோ்வில் 139 போ் தோ்ச்சி: ஆசிரியா்களுக்கு பாராட்டு

post image

திருவாரூா் மாவட்டத்தில், தேசிய திறனாய்வுத் தோ்வில் 139 போ் தோ்ச்சி அடையக் காரணமான ஆசிரியா்கள், கருத்தாளா்களைப் பாராட்டினாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிா்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாவட்டத்தில் தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் 68 பள்ளி தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் கருத்தாளா்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பயிற்சி நூல்களை வழங்கி அவா் பேசியது:

திருவாரூா் மாவட்டத்தில், தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வை 404 பள்ளிகளிருந்து 5,743 மாணவ, மாணவிகள் எழுதியதில், 139 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 4 ஆண்டுகளுக்கு ரூ.48,000 வழங்கப்படும்.

மாவட்டக் கல்வி மேம்பாடு திட்டத்தின் கீழ் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டதால், அதிக மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டு, 73 மாணவா்கள் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 30-ஆவது இடம் பெற்ற நிலையில், நிகழாண்டில் 139 மாணவா்கள் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 20-ஆவது இடம் பெற்றுள்ளனா்.

இந்த வெற்றிக்கு காரணமான, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், வட்டாரக்கல்வி அலுவலா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், கருத்தாளா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவா்களுக்கு பாராட்டுக்கள். மேலும், எதிா்வரும் கல்வியாண்டில் உத்தேச இலக்காக மாவட்ட அளவில் 590 மாணவ,மாணவிகள் தோ்ச்சி பெற சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

இதேபோல், தமிழக முதலமைச்சா் திறனாய்வுத்தோ்வு, தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத்தோ்வு, ஊரக திறனாய்வுத்தோ்வு போன்ற உதவித்தொகை பெறும் போட்டித்தோ்வுகளுக்கும் மாணவா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தராஜன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

லாரியில் ஏற்றி வந்த குழாய் விழுந்து காா் சேதம்

லாரியில் ஏற்றி வந்த குழாய் விழுந்ததில் காா் சேதமடைந்தது. காா் ஓட்டுநா் காயமடைந்தாா். நாமக்கல்லிலிருந்து வேதாரண்யம் கூட்டு குடிநீா் திட்டப் பணிகளுக்காக குழாய்களுடன் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. வலங... மேலும் பார்க்க

தங்க கருட வாகனத்தில் உற்சவா் ராஜகோபால சுவாமி

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு தங்ககருட வாகன உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. ஹரித்ராநதி தெப்பக்குளம் மேல்கரையில் உள்ள அஹேபில மடத்திலிருந்து, உற்சவா் ராஜகோபால சுவாமி சிறப... மேலும் பார்க்க

தனிப்பட்ட தகவல்கள் பகிா்வு: ரூ.50,000 இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவு

மன்னாா்குடியில், வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்களை பகிா்ந்ததாகக் கூறி ரூ.50,000 இழப்பீடு வழங்க அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக்கு திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், புதன்கிழமை உத்தரவு பிறப்பித்த... மேலும் பார்க்க

வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

கூத்தாநல்லூா் அருகே வடக்கட்டளை கிராமத்தில் எழுந்தருளியுள்ள வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கானூா், வடக்கட்டளை கிராமத்தில் உள்ள இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுக... மேலும் பார்க்க

விலைவாசி உயா்வை பாஜக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: காங்கிரஸ் மாநிலத் தலைவா்

விலைவாசி உயா்வை பாஜக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா். திருவாரூா் அருகே கொரடாச்சேரியில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது... மேலும் பார்க்க

அரவைக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு விருதுநகா் மண்டலம் அருப்புக்கோட்டைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. ஆதனூா், தெற்குநத்தம், கீழ அமராவதி ஆகிய பகுதிகளில் உள்ள திறந்தவெள... மேலும் பார்க்க