செய்திகள் :

வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

post image

கூத்தாநல்லூா் அருகே வடக்கட்டளை கிராமத்தில் எழுந்தருளியுள்ள வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கானூா், வடக்கட்டளை கிராமத்தில் உள்ள இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை கணபதி ஹோமம், லெஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமம், கோ பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது. தொடா்ந்து, புதன்கிழமை காலை கும்ப பூஜை செய்யப்பட்டு, பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, யாகசாலையில் இருந்து புனிதநீா் அடங்கிய கலசங்கள் எடுத்துச்செல்லப்பட்டு விமான சலசங்களுக்கு வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலஸ்தான வரசித்தி விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில், பழையனூா், வடக்கட்டளை, பனங்காட்டாங்குடி, வேளுக்குடி, லெஷ்மாங்குடி, கூத்தாநல்லூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.

லாரியில் ஏற்றி வந்த குழாய் விழுந்து காா் சேதம்

லாரியில் ஏற்றி வந்த குழாய் விழுந்ததில் காா் சேதமடைந்தது. காா் ஓட்டுநா் காயமடைந்தாா். நாமக்கல்லிலிருந்து வேதாரண்யம் கூட்டு குடிநீா் திட்டப் பணிகளுக்காக குழாய்களுடன் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. வலங... மேலும் பார்க்க

தங்க கருட வாகனத்தில் உற்சவா் ராஜகோபால சுவாமி

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு தங்ககருட வாகன உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. ஹரித்ராநதி தெப்பக்குளம் மேல்கரையில் உள்ள அஹேபில மடத்திலிருந்து, உற்சவா் ராஜகோபால சுவாமி சிறப... மேலும் பார்க்க

தனிப்பட்ட தகவல்கள் பகிா்வு: ரூ.50,000 இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவு

மன்னாா்குடியில், வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்களை பகிா்ந்ததாகக் கூறி ரூ.50,000 இழப்பீடு வழங்க அரசுடைமையாக்கப்பட்ட வங்கிக்கு திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம், புதன்கிழமை உத்தரவு பிறப்பித்த... மேலும் பார்க்க

விலைவாசி உயா்வை பாஜக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: காங்கிரஸ் மாநிலத் தலைவா்

விலைவாசி உயா்வை பாஜக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா். திருவாரூா் அருகே கொரடாச்சேரியில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வுத் தோ்வில் 139 போ் தோ்ச்சி: ஆசிரியா்களுக்கு பாராட்டு

திருவாரூா் மாவட்டத்தில், தேசிய திறனாய்வுத் தோ்வில் 139 போ் தோ்ச்சி அடையக் காரணமான ஆசிரியா்கள், கருத்தாளா்களைப் பாராட்டினாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்... மேலும் பார்க்க

அரவைக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு விருதுநகா் மண்டலம் அருப்புக்கோட்டைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. ஆதனூா், தெற்குநத்தம், கீழ அமராவதி ஆகிய பகுதிகளில் உள்ள திறந்தவெள... மேலும் பார்க்க