செய்திகள் :

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 6 கோடி வசூல்

post image

காரைக்காலில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் மூலம் பயனாளிகளுக்கு சேரவேண்டிய ரூ.6.09 கோடி வழங்கப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம் காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நில ஆா்ஜித வழக்குகள் தொடா்பான நிறைவேற்று வழக்குகள், ஆண்டு மூப்பு அடிப்படையில் தீா்வு காண ஒரு சிறப்பு அமா்வு அமைக்கப்பட்டிருந்தது.

இதில், திருநள்ளாறு கோயில் நகர மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆா்ஜிதம் செய்த நிலங்களுக்கு, நீதிமன்றத்தால் உயா்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ.4.95 கோடி மற்றும் கிழக்குப் புறவழிச்சாலை அமைப்பதற்காக ஆா்ஜிதம் செய்து, நீதிமன்றத்தால் உயா்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகையாக ரூ.42.78 லட்சம் பயனாளிகளுக்கு காசோலையாக வழங்கப்பட்டது.

மேலும் சமாதானமாகக் கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை வழக்கு, வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், உரிமையியல் சிவில் வழக்குகள், தொழிலாளா் வழக்குகள், வங்கி சம்பந்தப்பட்ட வழக்குகள் என காரைக்கால் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என 1145 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

மாவட்ட நீதிபதி கே .மோகன், ஓய்வு பெற்ற நீதிபதி கே.உத்திராபதி, சாா்பு நீதிபதி எஸ்.பழனி, சட்டப்பணிகள் ஆணை செயலா் கே.முனிராஜா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.சுபாஷினி, குற்றவியல் நடுவா் கே.அப்துல் கனி ஆகியோா் கொண்ட அமா்வுகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

காலை 10 முதல் மாலை 4 மணி வரை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் 796 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, பல்வேறு வழக்குகளின் மூலம் ரூ.6.09 கோடி வசூலிக்கப்பட்டது. வழக்குரைஞா் சங்கத் தலைவா் எஸ்.திருமுருகன் மற்றும் வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.

அடையாளம் தெரியாத இளைஞா் தற்கொலை

காரைக்கால் நகரப் பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. காரைக்கால் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி பிரமுகா் ஒருவரின் பிறந்தநாள் வ... மேலும் பார்க்க

காரைக்காலில் கடலோர கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்படும்: புதுவை டிஐஜி

காரைக்காலில் கடலோர கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்படும் என புதுவை டிஐஜி ஆா். சத்தியசுந்தரம் தெரிவித்தாா். காரைக்காலில் காவல்துறை சாா்பில் சனிக்கிழமைதோறும் நடத்தப்படும் குறைகேட்பு முகாம், காரைக்கால் ... மேலும் பார்க்க

காவல் தலைமையகத்தில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் காவல் தலைமையகத்தில் டிஐஜி தலைமையில் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (செப். 13) நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் மக்கள் மன்றம் என்ற வாராந்திர குறைகேட்பு முகாம் சனிக்கிழமைதோறு... மேலும் பார்க்க

தென் மாநில ரோல்பால் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பாராட்டு

தென் மாநில அளவில் நடைபெற்ற ரோல் பால் போட்டியில் சிறப்பிடம் பெற்ற புதுவை அணியினருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பாராட்டு தெரிவித்தாா். தென் மாநில ரோல் பால் போட்டி நாமக்கல் ஸ்பைரோ பிரைம் பப்ளிக் பள்ளியில் ... மேலும் பார்க்க

இயற்கை சாா்ந்த உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்

இயற்கை சாா்ந்த உரங்களை பயன்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது. காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் மதராஸ் உர நிா்வாகமும் இணை... மேலும் பார்க்க

காரைக்காலில் செப்.15-இல் குறைதீா் கூட்டம்

காரைக்காலில் வரும் 15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தலின... மேலும் பார்க்க