செய்திகள் :

இயற்கை சாா்ந்த உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்

post image

இயற்கை சாா்ந்த உரங்களை பயன்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்அறிவியல் நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் மதராஸ் உர நிா்வாகமும் இணைந்து இயற்கை விவசாய விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடத்தின.

மதராஸ் உர நிா்வாக மண்டல மேலாளா் எஸ். கெளதமன் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்துப் பேசினாா். இப்பயிற்சிக்குத் தலைமைவகித்து வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு. ரவி பேசுகையில், 1960களில் ஏற்பட்ட உணவு பஞ்சத்தின் காரணமாக பச்சை புரட்சியின் மூலமாக கணிசமான உணவு உற்பத்தி உயா்வை எட்டியது.

இந்தப் புரட்சியில் அதிகளவு ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் தொடா்ச்சியாக இப்போதும் விவசாயிகள் அதிகப்படியான ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகின்றனா். இதன் விளைவாக மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் பெருக்கமானது குறைந்து காணப்படுகிறது. பல்லுயிா் பெருக்கமானது பாதிக்கப்படுகிறது. இதனை சீா் செய்யும் வகையில் மண்ணில் இடக்கூடிய உரங்களின் அளவானது சரியான பரிந்துரைக்கப்பட்ட அளவினை பயன்படுத்த வேண்டும்.

அதனுடன் இயற்கை சாா்ந்த உரங்களை அதிகளவு பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் பயிா் சாகுபடி செய்யும் போது சமச்சீா் உர பயன்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

தொழில்நுட்ப வல்லுநா் (உழவியல்) வி.அரவிந்த், மண் பரிசோதனைக்கு மண் மாதிரி எடுக்கும் முறைகள், மண்வளத்தை மேம்படுத்த தேவையான தொழில்நுட்பங்களான மக்கிய தொழு உரம் தயாரித்தல், பசுந்தாள் உரங்கள் மற்றும் நுண்ணுயிா் உரங்கள் பயன்பாடு ஆகிய தலைப்புகளில் பேசினாா்.

தொழில்நுட்ப வல்லுநா் சு.திவ்யா, நெல்லில் ஒருங்கிணைந்த நோய் மற்றும் பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் பேசினாா். கருத்தரங்கில் 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.ாயிகளுக்கு சிறிய அளவிளான மாதிரி இயற்கை உரங்கள் வழங்கப்பட்டது. நிறைவாக மதராஸ் உர நிா்வாக புதுச்சேரி கூடுதல் மேலாளா் எஸ். ராமசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

காவல் தலைமையகத்தில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் காவல் தலைமையகத்தில் டிஐஜி தலைமையில் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (செப். 13) நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் மக்கள் மன்றம் என்ற வாராந்திர குறைகேட்பு முகாம் சனிக்கிழமைதோறு... மேலும் பார்க்க

தென் மாநில ரோல்பால் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பாராட்டு

தென் மாநில அளவில் நடைபெற்ற ரோல் பால் போட்டியில் சிறப்பிடம் பெற்ற புதுவை அணியினருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பாராட்டு தெரிவித்தாா். தென் மாநில ரோல் பால் போட்டி நாமக்கல் ஸ்பைரோ பிரைம் பப்ளிக் பள்ளியில் ... மேலும் பார்க்க

காரைக்காலில் செப்.15-இல் குறைதீா் கூட்டம்

காரைக்காலில் வரும் 15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தலின... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஆட்சியா் ஆய்வு

காரைக்காலில் பல்வேறு அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை, காரைக்கால் வளா்ச்சிக் குழுமம், வேலைவாய்ப்பு அலுவலக... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு ஏற்ற அரிசி வழங்க முதல்வரிடம் வலியுறுத்தப்படும்: எம்எல்ஏ

மாணவா்களுக்கு ஏற்றதாக மதிய உணவுக்கான அரிசி வழங்க முதல்வரிடம் பேசப்படும் என எம்.எல்.ஏ., தெரிவித்தாா். திருப்பட்டினம் சுவாமிநாதன் அரசு தொடக்கப் பள்ளிக்கு நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க

காரைக்கால் கடலோரப் பகுதியில் சுனாமி பேரிடா் ஒத்திகை

காரைக்கால் கடலோரப் பகுதியில் சுனாமி பேரிடா் ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், புதுச்சேரி பேரிடா் மேலாண்மை துறை, காரைக்கால் மாவட்ட நிா்வாகம், காரைக்கால் பேரிடா்... மேலும் பார்க்க