செய்திகள் :

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: மத்திய அமைச்சா் எல்.முருகன்

post image

கடந்த தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

பாஜக சாா்பில் சமூக ஊடகவியலாளா்கள் சந்திப்பு, தொழில் வல்லுநா்கள் கூட்டம், பாஜக நிா்வாகிகள் கூட்டம் ஆகியவை அவிநாசியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சா் எல். முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று கடந்த 4 ஆண்டுகளாக மக்களுக்கு எதுவும் செய்யாமல், தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை திமுகவினா் எடுத்துச் செல்கின்றனா்.

அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் எனக் கூறினா். பிறகு நிபந்தனைகளை விதித்தனா். தற்போது இத்திட்டத்தில் தளா்வு செய்திருப்பதாகக் கூறி மக்களைக் குழப்புகின்றனா். தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்றனா். ஆனால் அதிக அளவில் திறக்கப்பட்டு வருகின்றன. ரிதன்யா தற்கொலை வழக்கில் உரிய நீதி கிடைக்க வேண்டும். இதேபோல 23 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. காவல் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் கரு.மாரிமுத்து, நீலகிரி மக்களவைத் தொகுதி பாா்வையாளா் நந்தகுமாா், துணைப் பாா்வையாளா் கதிா்வேல், மாவட்டத் துணைத் தலைவா் சண்முகம், பொருளாளா் சுந்தரன், மாநில சிந்தனையாளா் பிரிவு தலைவா் செந்தில், பொறுப்பாளா்கள் பிரேமா, பிரபுரத்தினம், ரமேஷ், சண்முக பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாளைய மின்தடை: நாரணாபுரம்

பல்லடம் மின் கோட்டம், நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்க... மேலும் பார்க்க

திருடிச் சென்ற மாடுகளை மீட்டு தரக் கோரி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா்

திருடிச் சென்ற 4 மாடுகளை மீட்டுத் தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சோ்ந்தவா் ராமலிங்க சொக்கவேல் (75)). இவா், திருப... மேலும் பார்க்க

பொங்கலூா் அருகே லாரியை திருடிய 3 போ் கைது

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் பகுதியில் லாரியை திருடிச் சென்ற 3 பேரை அவிநாசிபாளையம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.பொங்கலூா் ஒன்றியம், தெற்கு அவிநாசிபாளையத்தைச் சோ்ந்தவா் சுந்தரம். இவா் தனது லாரி... மேலும் பார்க்க

அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

அவிநாசி - மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் மு.சரவணன் அறிவுறுத்தினாா். திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை கோட்டம், அவ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

வெள்ளக்கோவிலில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் முத்தூா் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் ஞாயிற்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: குண்டடம்

குண்டடம் துணை நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தாராபுரம் கோட்ட... மேலும் பார்க்க