கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
வெள்ளக்கோவிலில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் முத்தூா் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, இந்திரா நகா் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இளைஞா் நின்று கொண்டிருந்தாா். அவரிடம் சோதனை மேற்கொண்டபோது, விற்பனைக்காக 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த கெளரஹரி நாயக் (25) என்பதும், வெள்ளக்கோவிலில் தனியாா் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, கௌரஹரி நாயக்கை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.