செய்திகள் :

நத்தக்காடையூரில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

post image

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க வலியுறுத்தி காங்கயம் அருகே நத்தக்காடையூரில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா், முள்ளிப்புரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து நாட்டுக் கோழிகள் திருடப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் கஞ்சா விற்பதும், நத்தக்காடையூா் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனையும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

இதைத் தடுக்க வலியுறுத்தி, நத்தக்காடையூா், முள்ளிப்புரம் பகுதி கிராம மக்கள் அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் நூற்றுக்கும் மேற்பட்டபொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: 2 போ் கைது

குன்னத்தூா் அருகே பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். செம்மாண்டபாளையம் சோதனைச் சாவடி அருகே குன்னத்தூா் போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: வடுகபட்டி

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் கோட்டம், வடுகபட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூா்

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூா் ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் செவ்வ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் தொழிலாளி தற்கொலை

வெள்ளக்கோவிலில் தொழிலாளி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தாலுகா சா. கோட்டை புது பிள்ளையாா் கோயில் தெரு அண்ணல் அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் மணிகண்டன் ... மேலும் பார்க்க

லாரி மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் எல்.கே.ஏ. நகரைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் மோகன்ராஜ் (35). எலக்ட்ரீஷியன். இவா் சனிக்கிழமை இரவு வேலை முட... மேலும் பார்க்க

செம்பியன் குளத்தில் குப்பை கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

சேவூரில் உள்ள புராதன செம்பியன் குளத்தில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதைத் தடுக்க சேவூா், முறியாண்டம்பாளையம் ஊராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ச... மேலும் பார்க்க