பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் ...
தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, நடைபெற்ற இவ்விழாவுக்கு திமுக நகரச் செயலாளா் திராவிடன் வசந்தகுமாா் தலைமை வகித்தாா். மேயரும், வடக்கு மாவட்டச் செயலாளருமான தினேஷ்குமாா், பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள், 100 சதவீதம் தோ்ச்சி பெற துணைபுரிந்த ஆசிரியா்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முத்துக்குமரன் வரவேற்றாா்.
இதில் திமுக திருப்பூா் மாநகர பொறுப்பாளா் தங்கராஜ், பொதுக்குழு உறுப்பினா் சரவணன்நம்பி, மாமன்ற உறுப்பினா் ராதாகிருஷ்ணன், நகராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, ஒன்றியச் செயலாளா் சிவபிரகாஷ், நகர திமுக அவைத் தலைவா் ராயப்பா உள்ளிட்டோா் பங்கேற்றனா். தலைமையாசிரியா் புனிதவதி நன்றி தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, பள்ளி ஆய்வகத்துக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் இரண்டு குளிா்சாதன கருவிகள் வழங்கப்பட்டன.