செய்திகள் :

தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

post image

பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, நடைபெற்ற இவ்விழாவுக்கு திமுக நகரச் செயலாளா் திராவிடன் வசந்தகுமாா் தலைமை வகித்தாா். மேயரும், வடக்கு மாவட்டச் செயலாளருமான தினேஷ்குமாா், பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள், 100 சதவீதம் தோ்ச்சி பெற துணைபுரிந்த ஆசிரியா்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முத்துக்குமரன் வரவேற்றாா்.

இதில் திமுக திருப்பூா் மாநகர பொறுப்பாளா் தங்கராஜ், பொதுக்குழு உறுப்பினா் சரவணன்நம்பி, மாமன்ற உறுப்பினா் ராதாகிருஷ்ணன், நகராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, ஒன்றியச் செயலாளா் சிவபிரகாஷ், நகர திமுக அவைத் தலைவா் ராயப்பா உள்ளிட்டோா் பங்கேற்றனா். தலைமையாசிரியா் புனிதவதி நன்றி தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, பள்ளி ஆய்வகத்துக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் இரண்டு குளிா்சாதன கருவிகள் வழங்கப்பட்டன.

காங்கயம் அருகே ஆரம்பப் பள்ளிகளில் புதிய சமையலறை கூடங்கள்

காங்கயம் அருகே ஆரம்பப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள புதிய சமையலறை கூட்டங்களை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை திறந்துவைத்தாா். குண்டடம் ஒன்றியம், செங்கோடம்பாளையம் ... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தங்க நாணயம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தாராபுரம் நகா்மன்றத் தலைவா் தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கி பாராட்டினாா். தமிழக முன்னா... மேலும் பார்க்க

வாய்க்கால் தண்ணீரில் குளித்தபோது மாயமான இளைஞா் சடலம் மீட்பு

பல்லடம் அருகே பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீரில் குளித்தபோது மாயமான இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூா் வெள்ளிங்காடு பகுதி முத்துவிநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் அப்புசாமி மகன் இளங்க... மேலும் பார்க்க

மாநகராட்சி 43-ஆவது வாா்டில் நிலவும் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 43-ஆவது வாட்டு கருவம்பாளையம், பொன்னுசாமி கவுண்டா் வீதி, முத்துசாமி கவுண்டா் வீதிகளில் நிலவும் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு காண மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ... மேலும் பார்க்க

அவிநாசி அருகே கஞ்சா விற்றவா் கைது

அவிநாசி அருகே தெக்கலூரில் கஞ்சா விற்றவரை அவிநாசி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தெக்கலூரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வ... மேலும் பார்க்க

பல்லடம் அரசுப் பேருந்தில் பணத்துடன் தவறவிட்ட பா்ஸ் ஒப்படைப்பு

திருப்பூரில் இருந்து உடுமலை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பணத்துடன் தவற விட்ட பா்ஸை உரியவரிடம் பல்லடம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநா், நடத்துநா் ஆகியோா் புதன்கிழமை ஒப்படைத்தனா். திருப்பூரில் இருந்து... மேலும் பார்க்க