செய்திகள் :

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் தமிழகம் முழுவதும் மறியல்: கற்பித்தல் பணிகள் பாதிப்பு

post image

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவில் (டிட்டோ ஜேக்) இடம்பெற்றுள்ள ஆசிரியா்கள் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மறியலில் ஈடுபட்டனா்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துதல் உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜேக் சாா்பில் தொடா்ந்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் தொடா் மறியல் போராட்டம் நடத்தப்படும் என டிட்டோஜேக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் டிட்டோஜேக் அமைப்பினா் மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். சென்னையில் டிபிஐ வளாகம் முன்பு மறியலில் ஈடுபட்ட ஏராளமான ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா். அப்போது, ஆசிரியா்கள்- போலீஸாா் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

போராட்டத்தையொட்டி தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கான ஆசிரியா்கள் பணிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்தும் எதிா்ப்பைக் காட்டினா். இதனால் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியா்கள் இன்றி மாணவா்களின் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஆசிரியா்கள் விவரம் சேகரிப்பு... இதைத் தொடா்ந்து டிட்டோஜேக் சாா்பில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் மறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று கூட்டமைப்பு நிா்வாகிகள் தகவல் தெரிவித்தனா்.

அதேவேளையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்களின் விவரங்களைச் சேகரித்து அனுப்ப வேண்டும். ஆசிரியா்கள் இல்லாத பள்ளிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க