செய்திகள் :

தொழிற்சாலையில் தீ விபத்து: தீயில் கருகி இளைஞா் சாவு

post image

மானசரோவா் பூங்கா மெட்ரோ நிலையம் அருகே உள்ள தொழிற்சாலையில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 வயது நபா் ஒருவா் உயிரிழந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அந்தக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள சேமிப்பு அறையில் அஜீத் என்ற நபரின் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்று தில்லி தீயணைப்புத் துறை தலைவா் அதுல் காா்க் தெரிவித்தாா்.

200 சதுர கெஜம் அடித்தளம் மற்றும் மூன்று தளங்களைக் கொண்ட கட்டடத்தில் அமைந்துள்ள காப்பா் லைட் மெட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சேமிப்பு அறையில் அதிகாலை 1.38 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இரண்டாவது மாடியில் 50 சதுர கெஜம் பரப்பளவில் உள்ள சேமிப்பு அறை, தீயணைப்பு வீரா்கள் வந்தபோது தீப்பிடித்து எரிந்ததாக காா்க் மேலும் கூறினாா்.

மொத்தம் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மேலும் விசாரணைக்காக பாதிக்கப்பட்டவரின் உடல் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவா் தெரிவித்தாா்.

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க