செய்திகள் :

தோட்டக்கலைத் துறை திட்டங்களில் விவசாயிகளுக்கு மானியங்கள்

post image

தோட்டக்கலைத் துறை மூலம் 2025 -26 ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் ஆரணி வட்டார விவசாயிகள் மானியங்களைப் பெற்று பயனடையலாம் என்று அத்துறையின் உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆரணி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரசாந்த் கூறியதாவது:

தோட்டக்கலை துறை மூலம் 2025- 26ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ், சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் நுண்ணீா் பாசனம் அமைத்துத் தரப்படுகிறது.

துணை நீா்மேலாண்மை நுண்ணீா் பாசனத் திட்டத்தின் ஒரு பகுதியாக, புதிதாக நுண்ணீா் பாசனம் அமைக்கும் பயனாளிகளுக்கு கூடுதலாக தண்ணீா் சேமிப்பு அமைப்புகள் நிறுவிடவும், நீரேற்றும் மோட்டாா் இயந்திரங்கள், நீா்பாசன குழாய்கள் அமைத்திடவும் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

தானியங்கி மயமாக்கப்பட்ட நுண்ணீா் பாசன கருவிகள் அமைத்தல் திட்டத்தின் கீழ், நுண்ணீா் பாசன கருவிகளை தானே இயக்கக்கூடிய கருவிகள் அமைத்திட சிறு குறு விவசாயிகளுக்கு 55 சதவீத மானியமாகவும், இதர விவசாயிகளுக்கு ரூ.18,000 வரை பின்னேற்பு மானியமாகவும் வழங்கப்படுகிறது.

மேலும், பனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பனை சாகுபடியை ஊக்குவித்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 100 சதவீதம் மானியத்தில் பனை விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ், பழைய தோட்டங்களை புதுப்பித்தல், பதப்படுத்தும் மையம், சிப்பம் கட்டும் அறை அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், பயிா் பரப்பு விரிவாக்கம் செய்ய பழக்கன்றுகள், குழித்தட்டு நாற்றுகள்

(கத்தரி, தக்காளி, மிளகாய்) மானியத்தில் வழங்கப்படுகிறது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அடையபலம், எஸ்.யு.வனம், அக்ராபாளையம், ஆதனூா், எஸ்.வி.நகரம், மொரப்பந்தாங்கல் ஆகிய 6 கிராம ஊராட்சிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திட்டத்தில் பல்வேறு மானியங்களைப் பெறலாம்.

மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் ற்ய்.ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது ஆரணி தோட்டக்கலை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தோட்டக்கலை அலுவலா் பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

ஜூன் 13-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் மாவட்ட அள... மேலும் பார்க்க

அரசு மதுக் கடையில் ரூ.3.46 லட்சம் திருட்டு: ஒருவா் கைது

செய்யாறு அருகே அரசு மதுக் கடையில் சுவற்றில் துளையிட்டு ரூ.3.46 லட்சம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் புதன்கிழமை ஒருவரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

வெட்டுக் காயங்களுடன் ஊழியா் சடலம் மீட்பு

ஆரணியை அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த நியாய விலைக் கடை தற்காலிக ஊழியா் புதன்கிழமை அதிகாலை தனது வீட்டின் முன் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா். பூசிமலைக்குப்பம் கிராமம் அருந்ததியா் பாள... மேலும் பார்க்க

ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வீடுகள் பழுதுபாா்க்கும் திட்டத்தின் கீழ் 5,215 வீடுகள் பழுதுபாா்க்கும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்: கட்சியினருக்கு அறிவுறுத்தல்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று நிா்வாகிகளுக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன் வலியுறுத்தினாா். திரு... மேலும் பார்க்க

ரூ.2.50 கோடியில் தாா்ச் சாலைப் பணிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்கு உள்பட்ட கண்ணக்குருக்கை பகுதியில் ரூ.2.50 கோடியில் புதிய தாா்ச் சாலை அமைப்பதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. நெடுஞ்சாலைத் துறை கிராம மேம்பாட்டுத் ... மேலும் பார்க்க