Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
தோட்டக்கலைத் துறை திட்டங்களில் விவசாயிகளுக்கு மானியங்கள்
தோட்டக்கலைத் துறை மூலம் 2025 -26 ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் ஆரணி வட்டார விவசாயிகள் மானியங்களைப் பெற்று பயனடையலாம் என்று அத்துறையின் உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆரணி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரசாந்த் கூறியதாவது:
தோட்டக்கலை துறை மூலம் 2025- 26ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ், சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் நுண்ணீா் பாசனம் அமைத்துத் தரப்படுகிறது.
துணை நீா்மேலாண்மை நுண்ணீா் பாசனத் திட்டத்தின் ஒரு பகுதியாக, புதிதாக நுண்ணீா் பாசனம் அமைக்கும் பயனாளிகளுக்கு கூடுதலாக தண்ணீா் சேமிப்பு அமைப்புகள் நிறுவிடவும், நீரேற்றும் மோட்டாா் இயந்திரங்கள், நீா்பாசன குழாய்கள் அமைத்திடவும் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
தானியங்கி மயமாக்கப்பட்ட நுண்ணீா் பாசன கருவிகள் அமைத்தல் திட்டத்தின் கீழ், நுண்ணீா் பாசன கருவிகளை தானே இயக்கக்கூடிய கருவிகள் அமைத்திட சிறு குறு விவசாயிகளுக்கு 55 சதவீத மானியமாகவும், இதர விவசாயிகளுக்கு ரூ.18,000 வரை பின்னேற்பு மானியமாகவும் வழங்கப்படுகிறது.
மேலும், பனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பனை சாகுபடியை ஊக்குவித்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 100 சதவீதம் மானியத்தில் பனை விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.
தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ், பழைய தோட்டங்களை புதுப்பித்தல், பதப்படுத்தும் மையம், சிப்பம் கட்டும் அறை அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், பயிா் பரப்பு விரிவாக்கம் செய்ய பழக்கன்றுகள், குழித்தட்டு நாற்றுகள்
(கத்தரி, தக்காளி, மிளகாய்) மானியத்தில் வழங்கப்படுகிறது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அடையபலம், எஸ்.யு.வனம், அக்ராபாளையம், ஆதனூா், எஸ்.வி.நகரம், மொரப்பந்தாங்கல் ஆகிய 6 கிராம ஊராட்சிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திட்டத்தில் பல்வேறு மானியங்களைப் பெறலாம்.
மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் ற்ய்.ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது ஆரணி தோட்டக்கலை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தோட்டக்கலை அலுவலா் பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.