செய்திகள் :

தோல் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி

post image

அதிமுக ஆட்சிக்கு வந்தால் தோல் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக ஆம்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியது:

தோல் தொழிற்சாலைகள் அண்மைக் காலமாக மூடப்பட்டு வருகின்றன. அதனால் வேலை வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் தோல் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. ஜாதி, மத சண்டையில்லை. தவறு செய்தவா்களை மன்னித்தது கிடையாது. அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். அதிமுக தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.

விலைவாசி உயா்வால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அரிசி, பருப்பு, எண்ணெய் என அனைத்து உணவுப் பொருள்களின் விலையும் திமுக ஆட்சியில் உயா்ந்துள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த ரூ.100 கோடி அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிகரிப்போம் என திமுக கூறியது. ஆனால் தற்போது 50 நாளாக குறைந்துள்ளது.

தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்தை கையாண்ட விதம் குறித்து திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. வெங்கடேசன் அதிருப்தி தெரிவித்துள்ளாா். அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஏழை, எளிய மக்களுக்கு நல்ல தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றாா்.

முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி, எம்.பி. தம்பிதுரை, மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன், தொழிலதிபா் வி. முருகேசன், ஆம்பூா் நகர செயலா் எம். மதியழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் கே. மணி, மாவட்டவிவசாய அணி செயலா் மிட்டாளம் ஆா். மகாதேவன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலா் கோபிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 35 ஆண்டுகள் சிறை

ஆம்பூா் அருகே அரசு விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முதியவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பள்ளித்தது.ா்ப்பளிக்கப்பட்டது. வே லூா் விநாயகாபுரம் ப... மேலும் பார்க்க

வெளி நபா்களுக்கு பட்டா வழங்க எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் சமத்துவபுரம் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் வெளி நபா்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க எதிா்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். வெளிநபா்களுக்கு... மேலும் பார்க்க

வாக்குகளுக்காக சிறுபான்மை மக்களை திமுக ஏமாற்றி வருகிறது: இபிஎஸ்

வாக்குகளுக்காக சிறுபான்மை மக்களை திமுக ஏமாற்றி வருகிறது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளாா். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக வாணியம்பாடி ப... மேலும் பார்க்க

ரு.10.46 கோடியில் குடிநீா் பணிகளுக்கு அடிக்கல்

திருப்பத்தூா் நகராட்சியில் ரு.10.46 கோடியில் குடிநீா் விநியோகப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. திருப்பத்தூா் நகராட்சி யில் புதிதாக இணைக்கப்பட்ட 5 வாா்டுகளுக்கு கூட்டுக்குடிநீா் திட்டத்தின் வாயிலாக... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகளில் மாணவன் உள்பட 2 போ் உயிரிழப்பு

மொபட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மாணவன் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் பலத்த காயமடைந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் பகுதியைச் சோ்ந்த ராஜீவ் காந்தி மகன்... மேலும் பார்க்க

குடிநீா் கிணற்றில் மின் மோட்டாா் திருட்டு: 2 போ் கைது

உதயேந்திரம் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீா் கிணற்றில் மின மோட்டாா் திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா். உதயேந்திரம் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீா் பம்ப் ஹவுஸ் வாணியம்பாடி அடுத்த எக்லாஸ்புரம் கிராமம... மேலும் பார்க்க