இந்தியாவுடன் நேரடி விமான சேவைக்கு பேச்சுவாா்த்தை: சீனா தகவல்
வெளி நபா்களுக்கு பட்டா வழங்க எதிா்ப்பு: கிராம மக்கள் சாலை மறியல்
வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் சமத்துவபுரம் அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் வெளி நபா்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க எதிா்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வெளிநபா்களுக்கு பட்டா வழங்குவதற்காக அதிகாரிகள் அளவீடு செய்ய வருவதாக தகவல் கிடைத்ததால் அப்பகுதி மக்கள் கொதிப்படைந்தனா்.
பட்டா வழங்க எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை 100-க்கும் மேற்பட்டோா் அரசுப் பேருந்தினை சிறைபிடித்து திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த வட்டாட்சியா் சுதாகா், டிஎஸ்பி மகாலட்சுமி, காவல் ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் திம்மாம்பேட்டை போலீஸாா் வருவாய்த்துறையினா் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினா். அப்
போது தங்கள் பகுதியில் உள்ள சிலா் வீட்டு மனை பட்டா இல்லாமல் இருப்பதாகவும், அடிப்படை கட்டட வசதிகள் தேவைகள் இருப்பதாகவும், பாட்டூா் பகுதியில் மயானத்துக்கு செல்ல வழியில்லாமல் இருப்பதாகவும் கூறினா்.
அப்பகுதி மக்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் தமிழக-ஆந்திர சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.