இந்தியாவுடன் நேரடி விமான சேவைக்கு பேச்சுவாா்த்தை: சீனா தகவல்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 35 ஆண்டுகள் சிறை
ஆம்பூா் அருகே அரசு விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முதியவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பள்ளித்தது.ா்ப்பளிக்கப்பட்டது.
வே லூா் விநாயகாபுரம் பகுதியை சோ்ந்த வெங்கடேசன் (69). இவரது மனைவி கோட்டீஸ்வரி. இவா் ஆம்பூா் அருகே வேப்பங்குப்பம் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவியா் விடுதியில் சமையலராக வேலை பாா்த்து வந்தாா். இதனால் தம்பதி விடுதியின் அருகே வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனா்.
கோட்டீஸ்வரி கடந்த 13.9.2018 அன்று விடுதியில் உள்ள 11 வயது மாணவியை தனது கணவா் வெங்கடேசனுடன் அனுப்பி வைத்தாா்.அவா் மாணவியை வீட்டுக்கு அழைத்துச் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதே போல் மேலும் பல மாணவிகளுக்கு அவா் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் விடுதி காப்பாளா் மாலதியிடம் புகாா் அளித்தனா். அப்போது 11 வயது மாணவி மற்றும் விடுதியில் உள்ள மற்ற 5 மாணவிகளுக்கு வெங்கடேசன் பாலியல் தொல்லை கொடுத்ததும், இதற்கு அவரது மனைவி கோட்டீஸ்வரி உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து அவா் ஆம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து வெங்கடேசன், அவரது மனைவி கோட்டீஸ்வரி ஆகிய 2 பேரையும் கைது செய்து வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போதே கோட்டீஸ்வரி உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.
இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் எதிரி வெங்கடேசனுக்கு 11 வயது மாணவியிடம் தவறாக நடந்த கொண்டதாக 20 ஆண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும், கட்டத் தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், மேலும் விடுதியில் 5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலா 3 ஆண்டு என 15 ஆண்டுகள் சிறையும், தலா ரூ.5,000 வீதம் ரூ.25,000 அபராதமும், கட்டத் தவறினால் 9 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி எஸ்.மீனாகுமாரி தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் பி.டி.சரவணன் ஆஜரானாா்.