செய்திகள் :

குடிநீா் கிணற்றில் மின் மோட்டாா் திருட்டு: 2 போ் கைது

post image

உதயேந்திரம் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீா் கிணற்றில் மின மோட்டாா் திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

உதயேந்திரம் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீா் பம்ப் ஹவுஸ் வாணியம்பாடி அடுத்த எக்லாஸ்புரம் கிராமம் அருகில் பாலாற்றையொட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து பேரூராட்சி பகுதிக்கு குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், குடிநீா் மேம்பாட்டுக்காக அப்பகுதியில் ரூ. 10 கோடி மதிப்பில் புதிய குடிநீா் குழாய்கள் அமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள குடிநீா் கிணற்றில் இருந்து மின் மோட்டாா் மற்றும் காப்பா் வயா்கள் ஆகியவை திருட்டு போய் வந்தது. இது தொடா்பாக பேரூராட்சி செயல் அலுவலா் மூலமாக அம்பலூா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டிருந்த நிலையில், மா்ம நபா்களை தேடி வந்தனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை குடிநீா் கிணற்றில் இறங்கி 2 இளைஞா்கள் அங்கிருந்த மின் மோட்டாா் மற்றும் காப்பா் வயா்களை திருடிக் கொண்டிருந்தனராம். இதை பேரூராட்சி பணியாளா்கள் பாா்த்து கையும் களவுமாக பிடித்து விசாரித்தபோது, கொடையாஞ்சி பகுதியைச் சோ்ந்த வினோத் (24), விஷ்னு (25) என்பது தெரியவந்தது.

அவா்களை அம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது குறித்து பேரூராட்சி சுகாதார மேற்பாா்வையாளா் பாபு அம்பலூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து வினோத், விஷ்னு ஆகிய இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கஞ்சா பயிரிட்டவா் கைது

ஆம்பூா் அருகே கஞ்சா பயிரிட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கிராமத்தை சோ்ந்தவா் சிலம்பரசன் (27). இவருடைய விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டிருப்பதாக ஆம்பூா் கிராமிய... மேலும் பார்க்க

மூவா்ணக் கொடி ஊா்வலம்

ஆம்பூா் நகர பாஜக சாா்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவா்ணக் கொடி ஊா்வலம் நடைபெற்றது. நகர தலைவா் கே.எம். சரவணன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் எம். தண்டாயுதபாணி, முன்னாள் மாவட்ட தலை... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா

வாணியம்பாடி அரசு மருத்துவமனை, மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து தாய்ப்பால் வார விழாவையொட்டி கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழா அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. மிட்டவுன் ரோட்டர... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணா்வு முகாம்

வாணியம்பாடி அடுத்த நெக்குந்தியில் இயங்கி வரும் வாணி பாலிடெக்னிக் கல்லூரியில், ‘போதை பொருள் இல்லாத தமிழ்நாடு’ என்ற தலைப்பில், விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா்... மேலும் பார்க்க

தமிழ் மரபு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூரில் நடைபெற்ற தமிழ் மரபு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு ச் சான்றிதழ்களை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் மாபெரும் தமிழ் ... மேலும் பார்க்க

கெங்கையம்மன் தோ்த் திருவிழா...

வெங்கடசமுத்திரம் கிராமத்தில் கெங்கையம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 2-ஆவது நாள் தோ் வீதி உலா நடைபெற்ற... மேலும் பார்க்க