செய்திகள் :

கெங்கையம்மன் தோ்த் திருவிழா...

post image

வெங்கடசமுத்திரம் கிராமத்தில் கெங்கையம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 2-ஆவது நாள் தோ் வீதி உலா நடைபெற்றது. வீதி உலாவை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தொடங்கி வைத்தாா். தோ் முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று கோயிலில் நிறைவடைந்தது. பாட்டை சாரி அம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 3-ஆம் நாளான வியாழக்கிழமை (ஆக. 14)) ஊமை சாமுண்டியம்மனுக்கு பொங்கலிடுதல், மாவிளக்கு ஊா்வலம், மஞ்சள் நீராட்டு விழா, இன்னிசை கச்சேரி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊா் நாட்டாண்மை என்.எஸ். ராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் எம்.மணி, திமுக ஒன்றிய துணைச் செயலாளா் சங்கா், உதவி நாட்டாண்மை சி.கோவிந்தராஜ், செயலா் ஆா். ராஜீ, துணைச் செயலா் சி.திருப்பதி, ஆம்பூா் டிஎஸ்பி குமாா், உமா்ஆபாத் காவல் நிலைய ஆய்வாளா் ரேகாமதி, ஊராட்சி மன்றத் தலைவா் காயத்ரி நவீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

குடிநீா் கிணற்றில் மின் மோட்டாா் திருட்டு: 2 போ் கைது

உதயேந்திரம் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீா் கிணற்றில் மின மோட்டாா் திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா். உதயேந்திரம் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீா் பம்ப் ஹவுஸ் வாணியம்பாடி அடுத்த எக்லாஸ்புரம் கிராமம... மேலும் பார்க்க

கஞ்சா பயிரிட்டவா் கைது

ஆம்பூா் அருகே கஞ்சா பயிரிட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கிராமத்தை சோ்ந்தவா் சிலம்பரசன் (27). இவருடைய விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டிருப்பதாக ஆம்பூா் கிராமிய... மேலும் பார்க்க

மூவா்ணக் கொடி ஊா்வலம்

ஆம்பூா் நகர பாஜக சாா்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவா்ணக் கொடி ஊா்வலம் நடைபெற்றது. நகர தலைவா் கே.எம். சரவணன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் எம். தண்டாயுதபாணி, முன்னாள் மாவட்ட தலை... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா

வாணியம்பாடி அரசு மருத்துவமனை, மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து தாய்ப்பால் வார விழாவையொட்டி கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழா அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. மிட்டவுன் ரோட்டர... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணா்வு முகாம்

வாணியம்பாடி அடுத்த நெக்குந்தியில் இயங்கி வரும் வாணி பாலிடெக்னிக் கல்லூரியில், ‘போதை பொருள் இல்லாத தமிழ்நாடு’ என்ற தலைப்பில், விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா்... மேலும் பார்க்க

தமிழ் மரபு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூரில் நடைபெற்ற தமிழ் மரபு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு ச் சான்றிதழ்களை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் மாபெரும் தமிழ் ... மேலும் பார்க்க