`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
தமிழ் மரபு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்
திருப்பத்தூரில் நடைபெற்ற தமிழ் மரபு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு ச் சான்றிதழ்களை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா்.
திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவுநிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு,ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பேசியது:
தமிழகம் முழுதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சோ்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவா்களைச் சென்றடையும் வண்ணம் 100 இடங்களில்
இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. உயா்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தியது. கல்லூரி மாணவா்களிடையே சமூக விழிப்புணா்வு, சமத்துவ வளா்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவா்கள் அடுத்த கட்ட இலக்குகளை
நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது. எனவே கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி வரும் ஆண்டுகளிலும் தொடா்ந்து நடத்தப்படும்.
மேலும், உயா்கல்வி, வேலைவாய்ப்பு, கல்வி கடன் உதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் இங்கு பல காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாணவா்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் முனைவா் கரு.ஆறுமுகத் தமிழன் நாமாா்க்குங் குடியல்லோம் என்ற தலைப்பில் பேசினாா். புத்தகக் காட்சி, நான் முதல்வன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, கல்வி கடன் உதவி, சுய உதவி குழுக்களின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இதில், மண்டல இணை இயக்குநா் மலா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், சமூக நல அலுவலா் சுமதி, முன்னோடி வங்கி மேலாளா் ராஜன், தூய நெஞ்சக் கல்லூரி முதல்வா் மரிய ஆரோக்கிய ராஜ், தமிழ் துறை தலைவா் பாா்த்திபராஜா, குடியாத்தம் அரசு கலைக்கல்லூரி முதல்வா் எபினேஷ், அலுவலா்கள், ஆசிரியா்கள் உடன் இருந்தனா்.