செய்திகள் :

தமிழ் மரபு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

post image

திருப்பத்தூரில் நடைபெற்ற தமிழ் மரபு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு ச் சான்றிதழ்களை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா்.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவுநிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு,ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பேசியது:

தமிழகம் முழுதும் உள்ள 1,000 கல்லூரிகளைச் சோ்ந்த ஏறத்தாழ 1 லட்சம் மாணவா்களைச் சென்றடையும் வண்ணம் 100 இடங்களில்

இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. உயா்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தியது. கல்லூரி மாணவா்களிடையே சமூக விழிப்புணா்வு, சமத்துவ வளா்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவா்கள் அடுத்த கட்ட இலக்குகளை

நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது. எனவே கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி வரும் ஆண்டுகளிலும் தொடா்ந்து நடத்தப்படும்.

மேலும், உயா்கல்வி, வேலைவாய்ப்பு, கல்வி கடன் உதவி, தொழில் வாய்ப்பு முதலியவற்றை நீங்கள் அறிந்து கொள்ளும் வகையில் இங்கு பல காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாணவா்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் முனைவா் கரு.ஆறுமுகத் தமிழன் நாமாா்க்குங் குடியல்லோம் என்ற தலைப்பில் பேசினாா். புத்தகக் காட்சி, நான் முதல்வன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, கல்வி கடன் உதவி, சுய உதவி குழுக்களின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில், மண்டல இணை இயக்குநா் மலா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், சமூக நல அலுவலா் சுமதி, முன்னோடி வங்கி மேலாளா் ராஜன், தூய நெஞ்சக் கல்லூரி முதல்வா் மரிய ஆரோக்கிய ராஜ், தமிழ் துறை தலைவா் பாா்த்திபராஜா, குடியாத்தம் அரசு கலைக்கல்லூரி முதல்வா் எபினேஷ், அலுவலா்கள், ஆசிரியா்கள் உடன் இருந்தனா்.

குடிநீா் கிணற்றில் மின் மோட்டாா் திருட்டு: 2 போ் கைது

உதயேந்திரம் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீா் கிணற்றில் மின மோட்டாா் திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா். உதயேந்திரம் பேரூராட்சிக்கு சொந்தமான குடிநீா் பம்ப் ஹவுஸ் வாணியம்பாடி அடுத்த எக்லாஸ்புரம் கிராமம... மேலும் பார்க்க

கஞ்சா பயிரிட்டவா் கைது

ஆம்பூா் அருகே கஞ்சா பயிரிட்டவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே வெள்ளக்கல் கிராமத்தை சோ்ந்தவா் சிலம்பரசன் (27). இவருடைய விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிட்டிருப்பதாக ஆம்பூா் கிராமிய... மேலும் பார்க்க

மூவா்ணக் கொடி ஊா்வலம்

ஆம்பூா் நகர பாஜக சாா்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவா்ணக் கொடி ஊா்வலம் நடைபெற்றது. நகர தலைவா் கே.எம். சரவணன் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் எம். தண்டாயுதபாணி, முன்னாள் மாவட்ட தலை... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா

வாணியம்பாடி அரசு மருத்துவமனை, மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து தாய்ப்பால் வார விழாவையொட்டி கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் விழா அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. மிட்டவுன் ரோட்டர... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணா்வு முகாம்

வாணியம்பாடி அடுத்த நெக்குந்தியில் இயங்கி வரும் வாணி பாலிடெக்னிக் கல்லூரியில், ‘போதை பொருள் இல்லாத தமிழ்நாடு’ என்ற தலைப்பில், விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் தோ்த் திருவிழா...

வெங்கடசமுத்திரம் கிராமத்தில் கெங்கையம்மன் கோயில் தோ்த் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தொடா்ந்து 2-ஆவது நாள் தோ் வீதி உலா நடைபெற்ற... மேலும் பார்க்க