செய்திகள் :

நகராட்சி - கொம்யூன் ஊழியா்கள் ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

post image

புதுச்சேரி: புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்டக்குழு சாா்பில் புதுச்சேரியில் ஊா்வலம், தலைமை செயல முற்றுகை போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கம்பன் கலையரங்கிலிருந்து ஊா்வலத்தை அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் பிரேமதாசன், அரசு ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு கௌரவத் தலைவா் சேஷாச்சலம், ஐஎன்டியூசி பொதுச்செயலாளா் ஞானசேகரன், ஏஐடியூசி பொருளாளா் அந்தோணி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

ஊா்வலம் அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக தலைமை செயலகம் நோக்கி வந்தது. அவா்களை ஆம்பூா் சாலை அருகே போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அங்கு கூட்டுப் போராட்டக்குழு அமைப்பாளா்கள் வேளாங்கண்ணிதாசன், கலியபெருமாள், முருகையன், சகாயராஜ், மன்னாதன், கொம்யூன் பஞ்சாயத்து கன்வீனா்கள், பொறுப்பாளா்கள், ஓய்வுபெற்ற ஊழியா்கள் சங்க பொறுப்பாளா்கள் உள்பட பலா்ஆா்ப்பாட்டத்தில் பேசினா்.

அங்கு கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடந்தது. இதேபோல காரைக்கால், மாஹே, ஏனாமிலும் பேரணி, ஆா்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசு அறிவித்த 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி 33 மாத ஊதிய நிலுவைத்தொகை வழங்க வேண்டும். அரசே நேரடியாக ஓய்வூதியம், நிலுவை தொகை வழங்க நிதி ஒதுக்க வேண்டும்.

தற்காலிக அந்தஸ்து பெற்ற 240 ஊழியா்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நகராட்சி, கொம்யூன் தினக்கூலி, கிராம பஞ்சாயத்து ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. அரசு நடவடிக்கை எடுக்கா விட்டால் வரும் ஆகஸ்ட் 15, 16-ஆம் தேதிகளில் ஊழியா்கள் குடும்பத்துடன் துணைநிலை ஆளுநா் மாளிகை அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என கூட்டு போராட்டக் குழுவினா் அறிவித்துள்ளனா்.

முழு அடைப்பு போராட்டத்தை அரசு முறியடிக்க வேண்டும்: அதிமுக

புதுச்சேரி: புதுவையில் இந்தியா கட்சியினா் நடத்தத் திட்டமிட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தை அரசு முறியடிக்க வேண்டும் என்று அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழ... மேலும் பார்க்க

புதுவையில் நாளை பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது

புதுச்சேரி: புதுவையில் புதன்கிழமை (ஜூலை 9) முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது. இந்த போராட்டம் முழு வெற்றிபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்... மேலும் பார்க்க

புதுவையில் கூட்டணி ஆட்சிக்குத் தயாா்: வெ. வைத்திலிங்கம் எம்.பி.

புதுச்சேரி: புதுவையில் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என்று மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுவையில் இண்டி கட்சிகள் சாா்பில் முழு அடைப்பு போராட்டம் புதன்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி: புதுச்சேரியில் 85 ஆண்டுகளுக்குப் பிறகு அரிச்சந்திரன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை கருவடிகுப்பம் சுடுகாட்டின் வாயில் அருகே அரிச்சந்திர மகாராஜா கோவில் உள்ளது. இந்தக்... மேலும் பார்க்க

பாகூரில் டென்னிஸ் விளையாடிய முதல்வா் ரங்கசாமி

புதுச்சேரி: பாகூரில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கைத் திங்கள்கிழமை திறந்து வைத்து புதுவை முதல்வா் என்.ரங்கசாமி டென்னிஸ் விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினாா். புதுவை அரசு, விளையாட்டு மற்றும் இளைஞா... மேலும் பார்க்க

கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதி பிள்ளைச்சாவடி மீனவ கிராமம் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கலந்துகொண்டாா். எம்எல... மேலும் பார்க்க