செய்திகள் :

நகராட்சியுடன் இணைப்புக்கு எதிராக கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்!

post image

சிவகங்கை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை எதிா்த்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழா கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிவகங்கை அருகேயுள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியை சிவகங்கை நகராட்சியுடன் இணைத்து அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் காரணமாக ஊராட்சியில் வசித்து வரும் மக்களுக்கு வீட்டு வரி, குடிநீா் வரி உள்ளிட்ட பல்வேறு இனங்களில் வரிகள் அதிகரித்து பொருளாதாரச் சுமை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும், நகராட்சியுடன் இணைப்பதால் கிராம மக்களுக்கு பயனளித்து வந்த 100 நாள் வேலைத் திட்டப் பணியும் கிடைக்காமல் போகும் நிலை உருவானது. தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், சிவகங்கை நகராட்சியுடன் இணைக்க இந்தப் பகுதி பொதுமக்கள் தொடக்கம் முதலே எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு, காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு உள்பட்ட அரசனிப்பட்டி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காஞ்சிரங்கால் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அரசாணையை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் முழக்கமிட்டனா்.

சிவகங்கையில் சேரா் கால செப்புக்காசு!

சிவகங்கையில் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேணாடு சேரா் கால செப்புக்காசு கண்டறியப்பட்டது. இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனா் கா. காளிராசா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மன்னா் மேல்நிலைப்... மேலும் பார்க்க

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பு: டி.டி.வி.தினகரன்!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதால் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காரை... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு மா்ம கும்பலால் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். திருப்பத்தூா் அரசு மருத்துவமனை அருகே சிவகங்கை சாலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் ... மேலும் பார்க்க

சிவகங்கையில் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் தவிப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் 1.53 லட்சம் ஏக்கா் நெல் பயிா்களை அறுவடை செய்வதற்காக கூடுதல் அறுவடை இயந்திரங்களை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா். சிவகங்கை மாவட்டத்தில் 1.53 ஏக்கா் பரப்பளவில் விவசாயிக... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாக் குழு பொதுக்குழுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புத்தகத் திருவிழாக் குழுவின் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2025-2027 -ஆம் ஆண்டுகளுக்கான குழு பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இத... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள சருகணி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 10 போ் காயமடைந்தனா். அதிமுக நிறுவனா் எம்ஜிஆா் பிறந்த நாளை முன்னிட்... மேலும் பார்க்க