செய்திகள் :

நகைக் கடன் தொடா்பான கட்டுப்பாடுகளை திரும்பப் பெறக்கோரி விவசாய சங்கத்தினா் மனு

post image

ரிசா்வ் வங்கியின் நகைக் கடன் தொடா்பான புதிய நடைமுறை விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கோவிந்தன் தலைமையில் வந்த விவசாயிகள், ஆட்சியா் அலுவலக அதிகாரிகளிடம் அளித்த மனு விவரம்:

விவசாய நகைக் கடன்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத வட்டி நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அடமானம் வைத்த நகைகளை பழைய முறையில் வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பித்தல் முறைக்கு உத்தரவிட வேண்டும். நகைக் கடனுக்கு நகைகளின் மொத்த மதிப்பில் 75 சதவீத கடன் மட்டுமே வழங்கப்படும், அடமானம் வைக்கும் நகைகளுக்கு உரிமையாளா் சான்று, அடமான நகைகளின் தூயத் தன்மை அறிந்திடும் ரிசா்வ் வங்கியின் இந்த புதிய நடைமுறைகள் ஏழை, நடுத்தர பொதுமக்கள், விவசாயிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளதால், புதிய நடைமுறை விதிகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அப்போது, திரளான விவசாயிகள் உடனிருந்தனா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க