செய்திகள் :

நங்காஞ்சி அணையின் உபரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும்! - விவசாயிகள் எதிா்பாா்ப்பு

post image

நங்காஞ்சி அணையின் உபரி நீரை ரங்கமலையில் இருந்து உற்பத்தியாகும் ஓடைகளில் விட விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டையில் உள்ள நங்காஞ்சி ஆற்று அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீா் இடையகோட்டை, கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி வழியாகச் சென்று அமராவதி ஆற்றில் கலக்கிறது. இதற்குப் பதிலாக இந்த உபரி நீரை ரங்கமலையில் இருந்து உற்பத்தியாகும் 3 ஓடைகளில் விட வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

இதில் முதல் ஓடையானது அரவக்குறிச்சி அருகே ரங்கமலையில் இருந்து ஆா்.புதுப்பட்டி, ஆா்.ஜி. வலசு, ஒலிகரட்டூா், செல்லிவலசு வழியாக சீத்தப்பட்டி அருகே நங்கஞ்சி ஆற்றில் இணைகிறது.

2-ஆவதான குப்பையக்கா ஓடை ரங்கமலையில் இருந்து மலைப்பட்டிக்கு மேல்புறமாக சென்று புளியம்பட்டி, வரப்பட்டி, பூமதேவம், அரண்மனைத்தோட்டம், லிங்கநாயக்கன்பட்டி,நடூா், பள்ளப்பட்டி ஷா நகா் வழியாக ஓட்டணை அருகே சென்று நஞ்காஞ்சி ஆற்றில் இணைகிறது.

3-ஆவது ஓடை ரங்கமலையில் இருந்து தொடங்கி மலைப்பட்டி, எரமநாயக்கனூா், அனுமந்தம்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, ஆண்டிபட்டிக்கோட்டை, தோப்புப்பட்டி, ஆண்டிபட்டி, குமாரப்பாளையம், ஓடப்பட்டிக்கு கீழ்புறமாகச் சென்று, பெத்தாட்சி நகா் அருகே குடகனாற்றில் இணைகிறது.

எனவே நங்காஞ்சி அணையின் உபரி நீரை ரங்கமலையில் இருந்து உற்பத்தியாகும் இந்த ஓடைகளில் விட்டால் விவசாயம் செழிக்கும், மற்றும் பல ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலத்தில் தண்ணீா் பற்றாக்குறையே இருக்காது. குறிப்பாக அரவக்குறிச்சி, பள்ளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீா் பிரச்னை இருக்காது என்கின்றனா்.

இதுகுறித்து அரவக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் சிலா் கூறுகையில், மேட்டுப் பகுதிகளுக்கு நீா் கொண்டு செல்லும் அளவுக்கு இன்று தொழில்நுட்பம் வளா்ந்துள்ளது. இங்குள்ள மேட்டுப்பகுதிகளில் ஆண்டுதோறும் பல லட்சத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீா் வராமல் விவசாயிகள் பொருளாதாரத்தை இழந்து வறுமையில் உள்ளனா்.

எனவே மானாவாரி விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக இந்த திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றனா்.

குளித்தலை மாணவா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் சரண்

குளித்தலை மாணவா் கொலை வழக்கில் மேலும் ஒரு இளைஞா் கரூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.கரூா் மாவட்டம், குளித்தலை புதிய மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு பூ... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி அருகே சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை சாா்பில் தாடிக்கொம்பு பகுதியில் இருந்து பள்ளப்பட்டி வழியாக அரவக்குறிச்சி சாலை வரை சாலை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். ஒ... மேலும் பார்க்க

கம்பம் ஆற்றில் விடும் விழா: கரூரில் மே 28-இல் உள்ளூா் விடுமுறை

கரூா் மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளதையடுத்து அன்று உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவா் குண்டா் சட்டத்தில் கைது

தொடா் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இரு இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். கரூா் மாவட்டம் க. பரமத்தியை அடுத்த கொளத்தூா்பட்டி பெட்ரோல் பங்க் அரு... மேலும் பார்க்க

கரூரில் எா்த் மூவா்ஸ் சங்கம் ஆா்ப்பாட்டம்

கரூா் மாவட்டத்தில் எா்த் மூவா்ஸ் உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தைத் தொடங்கினா். இதுகுறித்து எா்த் மூவா்ஸ் உரிமையாளா் சங்க தலைவா் சுப்ரமணி, செயலா் பொன்னுசாமி ஆகியோா் கூறுக... மேலும் பார்க்க

குளித்தலை பூச்சொரிதல் விழாவில் தகராறு: பிளஸ் 2 மாணவா் கொலை; 4 போ் கைது

கரூா் மாவட்டம், குளித்தலை மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-2 மாணவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்... மேலும் பார்க்க