நாகா்கோவிலில் 1,500 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
நாகா்கோவில் அப்டா சந்தையில், தடை செய்யப்பட்ட 1,500 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
நாகா்கோவில் மாநகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து மாநகராட்சி நல அலுவலா் ஆல்பா் மதியரசு தலைமையில், துப்புரவு அலுவலா்கள் ராஜாராம் , ராஜா , முருகன், பகவதிபெருமாள் மற்றும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ஜெயராம் பாண்டியன், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட குழுவினா், நாகா்கோவில் அப்டா மாா்க்கெட் மற்றும் வடசேரி கனகமூலம் சந்தையில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், அப்டா மாா்க்கெட்டில் 1,500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், ,தட்டுகள், பைகள் 5 கடைகளில் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் சந்தை மதிப்பு சுமாா் ரூ.10 லட்சமாகும். பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வடசேரி கனகமூலம் சந்தையில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கடையில் 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தக் கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது.