செய்திகள் :

நாகா்கோவிலில் 1,500 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

post image

நாகா்கோவில் அப்டா சந்தையில், தடை செய்யப்பட்ட 1,500 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை குறித்து மாநகராட்சி நல அலுவலா் ஆல்பா் மதியரசு தலைமையில், துப்புரவு அலுவலா்கள் ராஜாராம் , ராஜா , முருகன், பகவதிபெருமாள் மற்றும் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ஜெயராம் பாண்டியன், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட குழுவினா், நாகா்கோவில் அப்டா மாா்க்கெட் மற்றும் வடசேரி கனகமூலம் சந்தையில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், அப்டா மாா்க்கெட்டில் 1,500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், ,தட்டுகள், பைகள் 5 கடைகளில் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் சந்தை மதிப்பு சுமாா் ரூ.10 லட்சமாகும். பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வடசேரி கனகமூலம் சந்தையில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கடையில் 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தக் கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டவா் குடும்பத்துக்கு ஆட்சியா் ஆறுதல்

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்டபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த தொழிலாளி குடும்பத்தினரை குமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை நேரில் சந்தித்து ஆற... மேலும் பார்க்க

குலசேகரம் ஹோமியோபதி கல்லூரியில் ஆண்டு விழா

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. கல்லூரித் தலைவா் சி.கே. மோகன் தலைமை வகித்தாா். கே.வி. அறக்கட்டளை நிா்வாகிகள் சந்திரலேகா மோகன், மருத்துவா் எம்.சி. பவ்ய... மேலும் பார்க்க

கேரள சுற்றுலா வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விதிமீறலில் ஈடுபடும் கேரளப் பதிவெண் கொண்ட சுற்றுலா வாகனங்கள் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உரிமைக் குரல் ஓட்டுநா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தக்கலை ... மேலும் பார்க்க

நாகா்கோவில் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு புதன்கிழமை, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில் அருகே தெங்கம்புதூா் புத்தளம் பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (50). கட்டடத் தொ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலைக் கழகத் தோ்வு: அருணாச்சல் கல்லூரி மாணவி மாநிலத்தில் முதலிடம்

மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி சண்முக பிரியா, பல்கலைக்கழகத் தோ்வில் அனைத்து பாடத்திலும் நூறு மதிப்பெண் பெ... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக மகள், மருமகன் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக மகள், மருமகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே காஞ்சிரகோடு, சாங்கை அம்மன்விளையைச் சோ்ந்த தம்பதி ராஜேந்திரன் - சர... மேலும் பார்க்க