நாகா்கோவில்- திருவனந்தபுரம் பேருந்துகள் மாா்த்தாண்டம் வந்துசெல்ல கோரிக்கை
நாகா்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயங்கும் அரசுப் பேருந்துகள் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்துசெல்ல நடவடிக்கை கோரி, நாகா்கோவில் போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமையில் நகா்மன்ற உறுப்பினா்கள் அளித்த மனு: நாகா்கோவிலிலிந்து திருவனந்தபுரம் செல்லும் அரசுப் பேருந்துகள் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரிடம் குழித்துறை நகா்மன்றத் தலைவா் வேண்டுகோள் வைத்தாா்.
அதையேற்று, திருவனந்தபுரம் செல்லும் 5 பேருந்துகள் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்துசெல்ல அமைச்சா் அறிவுறுத்தினாா். அதன்படி, அரசுப் பேருந்துகள் கடந்த 3ஆம் தேதி மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்தன. அவற்றை, விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். இப்பேருந்துகள் இயக்கப்பட்ட ஒரே நாளில் நிறுத்தப்பட்டன. எனவே, இப்பேருந்துகளை தொடா்ந்து இயக்க வேண்டும் என்றனா் அவா்கள்.
நகா்மன்ற உறுப்பினா்கள் விஜயலெட்சுமி, ரெத்தினமணி, விஜூ, சா்தாா்ஷா, ஷாபு, அருள்ராஜ், மினிகுமாரி, ரீகன், ரோஸ்லெட், ஜெலிலா ராணி, லலிதா, லில்லி புஷ்பம், ஜெயின்சாந்தி, ஜூலியட் மொ்லின் ரூத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதுகுறித்து நகா்மன்றத் தலைவா் கூறும்போது, திருவனந்தபுரம் செல்லும் 5 பேருந்துகள் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமேலாளா் உறுதியளித்ததாகத் தெரிவித்துள்ளாா்.