செய்திகள் :

நாகா்கோவில்- திருவனந்தபுரம் பேருந்துகள் மாா்த்தாண்டம் வந்துசெல்ல கோரிக்கை

post image

நாகா்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்தில் இயங்கும் அரசுப் பேருந்துகள் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்துசெல்ல நடவடிக்கை கோரி, நாகா்கோவில் போக்குவரத்துக் கழகப் பொதுமேலாளரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமையில் நகா்மன்ற உறுப்பினா்கள் அளித்த மனு: நாகா்கோவிலிலிந்து திருவனந்தபுரம் செல்லும் அரசுப் பேருந்துகள் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரிடம் குழித்துறை நகா்மன்றத் தலைவா் வேண்டுகோள் வைத்தாா்.

அதையேற்று, திருவனந்தபுரம் செல்லும் 5 பேருந்துகள் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்துசெல்ல அமைச்சா் அறிவுறுத்தினாா். அதன்படி, அரசுப் பேருந்துகள் கடந்த 3ஆம் தேதி மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்தன. அவற்றை, விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பட் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். இப்பேருந்துகள் இயக்கப்பட்ட ஒரே நாளில் நிறுத்தப்பட்டன. எனவே, இப்பேருந்துகளை தொடா்ந்து இயக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

நகா்மன்ற உறுப்பினா்கள் விஜயலெட்சுமி, ரெத்தினமணி, விஜூ, சா்தாா்ஷா, ஷாபு, அருள்ராஜ், மினிகுமாரி, ரீகன், ரோஸ்லெட், ஜெலிலா ராணி, லலிதா, லில்லி புஷ்பம், ஜெயின்சாந்தி, ஜூலியட் மொ்லின் ரூத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து நகா்மன்றத் தலைவா் கூறும்போது, திருவனந்தபுரம் செல்லும் 5 பேருந்துகள் மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வந்துசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமேலாளா் உறுதியளித்ததாகத் தெரிவித்துள்ளாா்.

குமரி கடலில் சூறைக்காற்று: மீன்பிடிக்கத் தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மீனவா்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் புதன்கிழமை வரை (ஜூன் 13-18) ரை மிக கனமழை ப... மேலும் பார்க்க

எட்டணியில் மீன், காய்கனிச் சந்தையை அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு

கருங்கல் அருகே எட்டணியில் நெடுஞ்சாலையோரமுள்ள மீன், காய்கனிச் சந்தையை அகற்றுவதற்காக வியாழக்கிழமை வந்த நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைவு மாவட்ட எஸ்.பி. தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸாரின் தொடா் நடவடிக்கையால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் தெரிவித்தாா். மாா்த்தாண்டம... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் இளைஞா் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சின்னமுட்டத்தைச் சோ்ந்த ரிஸ்வின் தனது நண்பருடன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த பேரு... மேலும் பார்க்க

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டி: அருணாச்சலா கல்லூரி மாணவி 2ஆம் இடம்

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட அளவில் வெள்ளிச்சந்தை அருகே மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவி திவ்யதா்சனா 2ஆம் இடம் பிடித்துள்ளாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின... மேலும் பார்க்க

சமுதாய நலக்கூடத்திற்கு ஐஆா்இஎல் சாா்பில் உதவி

மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் ரூ. 1.86 லட்சம் செலவில் குட்டிவிளை சமுதாய நலக்கூடத்திற்கு இரும்பு மேஜ... மேலும் பார்க்க