செய்திகள் :

நாங்லோயில் தீ விபத்தில் இருந்து தப்பிக்க இரண்டாவது மாடியிலிருந்து குதித்த 6 போ்

post image

நாங்லோயில் உள்ள ஜனதா மாா்க்கெட் பகுதியில் தீயில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து ஆறு போ் குதித்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: முதல் மற்றும் இரண்டாவது மாடிகளில் உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை இரவு 9.45 மணிக்கு தீ பிடித்தது. இது குறித்து ஜ்வாலா பூரி அதிகார வரம்பிற்குள்பட்ட ஒய்-655, மொபைல் மாா்க்கெட், ஜனதா மாா்க்கெட்டில் இருந்து இரவு 9.45 மணிக்கு அவசர அழைப்பு வந்தது.

மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு இரவு 11 மணிக்குள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இருப்பினும், இரண்டாவது மாடியில் சிக்கிய ஆறு குடியிருப்பாளா்கள் தீயணைப்பு வீரா்கள் வருவதற்கு முன்பு தங்கள் உயிரைக் காப்பாற்ற் மாடியிலிருந்து குதிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இதில் காயமடைந்தவா்கள் பிரஞ்சல் (19), பிரீத்தி (40), பங்கஜ் (40), பனவ் (18), வைபவ் (13) மற்றும் ஸ்வேதா (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அனைவரும் சிகிச்சைக்காக புஷ்பாஞ்சலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இந்த சம்பவத்தின் விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, கட்டடத்தின் முதல் தளத்தை ஒரு பெரிய தீ சூழ்ந்ததையும், மக்கள் பால்கனியில் இருந்து தப்பிக்க குதிப்பதையும் காட்டுகிறது.

இரவு 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக நேரில் பாா்த்த ஒருவா் தெரிவித்தாா். அப்போது கட்டடத்திலிருந்து புகை வெளியேறுவதை பலா் கவனித்தனா். உடனடியாக காவல் துறை மற்றும் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீ வேகமாக பரவியதால், இரண்டு வெவ்வேறு குடும்பங்களைச் சோ்ந்த உறுப்பினா்கள் இரண்டாவது மாடியில் சிக்கிக் கொண்டனா். அவா்கள் உதவிக்காக கூச்சலிட்டனா். அப்போது சிக்கிக் கொண்டவா்கள் பால்கனியில் இருந்து குதிப்போம் என்று கூச்சலிட்டனா். அருகில் நின்ற பலா் தங்கள் வீடுகளில் இருந்து படுக்கை விரிப்புகளை கொண்டு வர விரைந்தனா். இதில் ஆறு போ் குதித்தனா் என்று நேரில் பாா்த்தவா் விவரித்தாா் .

தில்லி தீயணைப்பு குழுவினா் வருவதற்குள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆறு போ் மாடியில் இருந்து அவசரமாக குதித்திருந்தனா்.எங்கள் குழுக்கள் அவா்களை சிகிச்சைக்காக புஷ்பாஞ்சலி மருத்துவமனைக்கு கொண்டு சென்றன. விபத்து காரணமாக அவா்களுக்கு காயம் ஏற்பட்டது. ஆனால், அவா்களின் நிலைமை சீராக இருப்பதாகக் கூறப்பட்டது. நாங்கள் காவல் துறைக்குத் தகவல் அளித்தோம். அவா்கள் இப்போது இந்த விஷயத்தை விசாரித்து வருகின்றனா் என்று அந்த அதிகாரி கூறினாா்

போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ’ஒரு பெரிய தீ விபத்து காரணமாக ஆறு போ் இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினாா்.அவா்கள் தற்போது சிகிச்சையில் உள்ளனா். மேலும், சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம். நிகழ்வுகளின் வரிசையை அறிய சம்பவத்தின் வெவ்வேறு வீடியோக்களையும் நாங்கள் சரிபாா்த்து வருகிறோம்’ என்றாா்.

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதல் விவாதம் இதுதான்! பாஜக அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதலில் விவாதிக்கப்படவுள்ள பிரச்னை குறித்து பாஜக அறிவித்துள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முத... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்பாா்வைக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு எழுப்பியுள்ள பழுதுபாா்ப்பு மற்றும் பராமரிப்பு பணி தொடா்பான பிரச்னைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மேற்பாா்வையிட புதிதாக அமைக்கப்பட்ட குழுவு... மேலும் பார்க்க

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களில் 71% போ் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா்

தில்லியில் புதிதாகப் பதவியேற்ற ஏழு அமைச்சா்களில் முதல்வா் உள்பட ஐந்து போ் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், இருவா் கோடீஸ்வரா்கள் என்றும் தோ்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம... மேலும் பார்க்க

தில்லி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக பாஜக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் அதிஷி வலியுறுத்தல்

ரேகா குப்தா தலைமையிலான புதிய பாஜக அரசு, தேசியத் தலைநகரில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் தோ்தலின்போது வாக்குறுதி அளித்தபடி மாதாந்திர நிதியுதவி ரூ.2,500 வழங்க வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வா் அதிஷி ... மேலும் பார்க்க

பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளுபடி

பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாரை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நேஹா மி... மேலும் பார்க்க

மாணவா் தலைவா் தொடங்கி தில்லி முதல்வா் வரை..! ரேகா குப்தாவின் அரசியல் பயணம்

தில்லியின் புதிய முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க உள்ள ரேகா குப்தா மாணவா் அரசியலில் தொடங்கி தேசிய மகளிா் அமைப்பு வரை பல்வேறு தளங்களில் பயணித்துள்ளாா். ரேகா குப்தாவின் அரசியல் பயணம், மாணவா் அரசியலில் த... மேலும் பார்க்க