செய்திகள் :

நாட்டில் கரோனா பாதிப்பு 1,000-யைத் தாண்டியது! மாநில வாரியாக விவரம்!!

post image

நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000-யைத் தாண்டியதாக மத்திய சுகாதாரத் துறை தகவல்தெரிவித்துள்ளது.

தெற்காசியாவில் மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கேரளம், மகாராஷ்டிரம், தில்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் இன்று(மே 26) காலை 8 மணி நிலவரப்படி கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி நாட்டில் தற்போது 1,009 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளத்தில் 430 பேருக்கு உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் 209 பேர், தில்லியில் 104, குஜராத்தில் 83, தமிழ்நாட்டில் 69, கர்நாடகத்தில் 47 , உத்தரப் பிரதேசத்தில் 15, ராஜஸ்தானில் 13, மேற்கு வங்கத்தில் 12, ஹரியாணா, புதுச்சேரியில் தலா 9, ஆந்திரத்தில் 4, மத்தியப் பிரதேசத்தில் 2, சத்தீஸ்கர், கோவா, தெலங்கானாவில் தலா ஒருவர் என மொத்தம் 1,009 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளத்தில் 2 பேர், மகாராஷ்டிரத்தில் 4 பேர், கர்நாடகத்தில் ஒருவர் கரோனா பாதிப்பால் இறந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க