செய்திகள் :

நாட்டு மாடுகளை அழிக்கத்தான் நவீன விவசாயம்! சீமான் பேச்சு!

post image

மதுரையில் 'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை' என்ற தலைப்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆடு, மாடுகளின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற்றது.

விராதனூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும் இடத்தில் சுற்றி இரும்பு வேலிகள் அமைத்து, அதன் முன்பாக ஒரு மேடை அமைத்து, மாடுகளுக்கு முன்பாக கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார்.

மாநாட்டில் சீமான் பேசுகையில், மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி கோவை வரையில் மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளை தமிழர்கள் வளர்த்து வந்தனர். ஆனால், இன்று கனிமவளக் கொள்ளையால் மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்படுவதால், நாட்டின மாடுகள் அழிந்து விட்டன. ஆடு, மாடுகளை திருடுபவர்கள், இன்று மேய்ச்சல் நிலங்களையே திருடுகின்றனர். இதை எங்கே போய் சொல்வது என்று மாடுகள் கேட்கின்றன.

விவசாயத்துக்காகத்தான் டிராக்டர் கொண்டுவரப்பட்டது. ஆனால், டிராக்டர்களைப் பயன்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மாடுகள் கொல்லப்பட்டன. நாட்டு மாடுகளை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டுத்தான், நவீன விவசாயம் கொண்டு வரப்பட்டது.

ஆயிரக்கணக்கான மாடுகள் கொன்று குவிக்கப்பட்டன. அதனால்தான் இன்று உலக நாடுகள் பால் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் நிலையில் இந்தியா பின்தங்கி இருக்கிறது. மாடுகளை அழித்து விட்டால் இறைச்சிக்கும் பாலுக்கும் எங்கே போவது. தமிழகத்தின் கன்னியாகுமரி தொடங்கி தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை வரையிலான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனிமவளக் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மேய்ச்சல் நிலங்கள் அருகி வருகிறது. இது தொடர்பாக கேள்வி கேட்டால் நம்மை விமர்சிக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான மாடுகள் கொல்லப்பட்டதால்தான், பால் உற்பத்தியில் இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளது. மாடுகளை அழித்து விட்டால், இறைச்சிக்கும் பாலுக்கும் என்ன செய்வது? 2022 -23 ஆம் ஆண்டில் மாட்டிறைச்சி மூலம் ரூ.28,000 கோடி, 2023-24 ஆண்டில் ரூ.30,000 கோடியும் நாட்டுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இந்தியாவின் பால் சந்தை மதிப்பான ரூ.13.5 லட்சம் கோடியில் ஒரு லட்சத்து இருபத்து எட்டாயிரம் கோடியை தமிழ்நாடு பங்களிக்கிறது.

ஆடு, மாடு மேய்ப்பது தொழில் அல்ல; எங்கள் பண்பாடு, கலாச்சாரம். மாட்டுக்கு பொங்கல் வைத்து கொண்டாடுபவன்தான் தமிழன். ஆடு, மாடு மேய்ப்பது என்ன கேவலமா? அது கேவலம் என்றால், இறைச்சியும் பாலும் எப்படி கிடைக்கும்? வெளிநாடுகளில் ஹெலிகாப்டர்களை வைத்து மாடு மேய்க்கின்றனர்.

நாட்டின மாடுகளை அழிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட ஜல்லிக்கட்டு மீதான தடையையே இன்னும் முழுதாக நீக்கவில்லை என்று தெரிவித்தார்.

Modern agriculture has destroyed our food says NTK Seeman

வண்டலூர் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிக... மேலும் பார்க்க

சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!

அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதளக் கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் ... மேலும் பார்க்க

அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரி... மேலும் பார்க்க

இன்று குரூப் 4 தோ்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் போட்டி

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் குரூப் 4 தோ்வை 13.89 லட்சம் போ் எழுதவுள்ளனா். மொத்தமுள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா் பணி... மேலும் பார்க்க

நிபா வைரஸ்: 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு அமைச்சா் மா. சுப்பிரமணியன்

கேரளத்தில் நிபா தொற்று பரவி வருவதால் தமிழகத்தின் 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். உலக மக்கள் தொகை தின நிகழ்... மேலும் பார்க்க

ரயில்வே கடவுப்பாதை ஆய்வு அறிக்கை: 2 வாரத்தில் சமா்ப்பிக்க உத்தரவு

ரயில்வே கடவுப் பாதைகளின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், தற்போதைய நிலை அந்தப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைத்தல் போன்றவை குறித்து 15 ... மேலும் பார்க்க