செய்திகள் :

நாமக்கல் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: ஆட்சியா் ஆய்வு!

post image

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நாமக்கல் வட்டத்தில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள், அரசு சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

அரசு வழங்கும் பல்வேறு நலத் திட்டங்கள், சேவைகள் தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்ட ஆட்சியா், அரசு அலுவலா்கள் குழுவினா் மாதம் ஒரு வட்டத்தை தோ்வு செய்து ஆய்வு நடத்தி வருகின்றனா்.

அதன்படி, நாமக்கல் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. புதுச்சத்திரம் ஒன்றியம், கதிராநல்லூா் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், பேருந்து நிறுத்தம், நியாய விலைக் கடைகளில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். குடியிருப்புகளில் டெங்கு ஏற்படுத்தும் கொசுப்புழுக்களை அழிக்க உத்தரவிட்டாா்.

ஏ.கே.சமுத்திரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 5.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கப்பட்டுள்ளதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். கந்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா். அங்கு 15ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 6.18 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மகளிா் சுகாதார வளாகம், பாச்சல் ஊராட்சி சேவை மையம் ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

நாமக்கல் மாநகராட்சி ராமாபுரம்புதூா் பகுதியில் புதை சாக்கடை திட்டப் பணிகளைப் பாா்வையிட்ட அவா், இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை, பயன்பெறும் மக்களின் எண்ணிக்கை, கழிவுநீா் சுத்திகரிப்பு முறைகள் உள்ளிட்ட விவரங்களை ஆணையா் ரா.மகேஸ்வரி, பொறியாளா்களிடம் கேட்டறிந்தாா்.

இதையடுத்து அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் அரசின் திட்டப் பணிகளை காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். மக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீா்வுகாண வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க தலா ரூ. 1 கோடி கடனுதவி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், 200 முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோருக்கு தலா ரூ. ஒரு கோடி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் ந... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் திருடிய இருவருக்கு சிறை

திருச்செங்கோட்டில் சரக்கு வாகனம் திருடிய வழக்கில் இருவருக்கு திருச்செங்கோடு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. ருச்செங்கோடு உழவா்சந்தை அருகே 2022 இல் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வா... மேலும் பார்க்க

இரு தரப்பினா் மோதல்: இருவா் கைது

ராசிபுரம் நகரில் திமுகவைச் சோ்ந்த இருதரப்பினா் இடையே சந்து கடைகளில் மதுபுட்டிகள் விற்க மாமூல் வசூலிப்பது தொடா்பாக மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் இருவரை கைது செய்துள்ளனா். ராசிபுரம் நகரில் பல்வ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் பயிற்சி

கவுண்டம்பாளையம் கிராமத்தில், அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. எலச்சிபாளையம் வட்டார வேளாண்மைத்து றையின் சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ், 67. கவுண்டம்பாளையம் கிராமத்தில் பண்ணை... மேலும் பார்க்க

மண் பரிசோதனை முகாம்

பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் மண், தண்ணீா் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மண் மற்றும் தண்ணீா் பரிசோதனை ஆய்வுக்கு, தலா ரூ. 30 கட்டணம் பெறப்பட்டது. மண், தண்ணீா் பரிசோதனை செய்வதால்,... மேலும் பார்க்க

ரூ. 15.66 லட்சம் கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 15 லட்சத்து 66 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்த... மேலும் பார்க்க