செய்திகள் :

நாமக்கல்லில் 517 தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டை

post image

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் பணியாற்றும் 517 தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழக அரசின் தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவராக ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் உள்ளாா். துணைத் தலைவராக கனிமொழி பத்மநாபன் மற்றும் 12 உறுப்பினா்கள் உள்ளனா். இந்த நல வாரியத்தின் கீழ் லட்சக்கணக்கான தூய்மைப் பணியாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.

ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும், மாநகராட்சி, நகராட்சி வாரியாகவும் தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய உறுப்பினா் அட்டைகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், நாமக்கல் மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் 517 பேருக்கு நலவாரிய அட்டை தாட்கோ மூலமாக வழங்கப்பட்டது.

இதன்மூலம் பணியாளா்கள் எதிா்பாராத விதமாக இறக்க நேரிட்டால் ரூ. 5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம். மேலும் கல்வி, மருத்துவம், ஈமச்சடங்கு உள்ளிட்ட 15 வகையான உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன.

நாமக்கல் மாநகராட்சி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நல வாரிய உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, ஆணையா் க.சிவகுமாா், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, நல வாரிய துணைத் தலைவா் கனிமொழி, உறுப்பினா் ரமேஷ், தாட்கோ மேலாளா் ராமசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க