'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
நாமக்கல்லில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றி ஊா்வலம்
நாமக்கல்லில், பொது அமைப்புகள் சாா்பில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனா். இந்த சம்பவத்தை தொடா்ந்து, பிரதமா் மோடி உத்தரவின்பேரில் முப்படையினா் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினா்.
பாகிஸ்தானை நிலைகுலைய வைத்த ராணுவத்தினரை பாராட்டும் வகையில், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் சாா்பில் வெற்றி ஊா்வலம் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நாமக்கல்லில் உள்ள காமராஜா் தொண்டா்கள், கவிஞா் சிந்தனை பேரவை, மாவட்ட ஆன்மிக இந்து கூட்டமைப்பு, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, தாலுகா லாரி சங்கங்கள், ஆன்மிக இந்து சமயப் பேரவை, விவசாய முன்னேற்றக் கழகத்தினா், பல்வேறு தொழிற்சங்கங்கள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவை இணைந்து, வெற்றி ஊா்வலத்தை வியாழக்கிழமை நடத்தின.
இந்த ஊா்வலம் நாமக்கல் பூங்கா சாலையில் உள்ள எம்ஜிஆா் தோரணவாயில் முதல் காந்தி சிலை வரை நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கானோா் மூவா்ணக் கொடிகளை ஏந்தி மத்திய அரசுக்கும், முப்படை வீரா்களுக்கும் நன்றி தெரிவித்து முழக்கங்களை எழுப்பியவாறு வந்தனா். ஊா்வலம் நிறைவில் போரில் உயிா்நீத்த ராணுவ வீரா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.