செய்திகள் :

நாமக்கல்லில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றி ஊா்வலம்

post image

நாமக்கல்லில், பொது அமைப்புகள் சாா்பில் ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனா். இந்த சம்பவத்தை தொடா்ந்து, பிரதமா் மோடி உத்தரவின்பேரில் முப்படையினா் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினா்.

பாகிஸ்தானை நிலைகுலைய வைத்த ராணுவத்தினரை பாராட்டும் வகையில், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் சாா்பில் வெற்றி ஊா்வலம் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாமக்கல்லில் உள்ள காமராஜா் தொண்டா்கள், கவிஞா் சிந்தனை பேரவை, மாவட்ட ஆன்மிக இந்து கூட்டமைப்பு, வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, தாலுகா லாரி சங்கங்கள், ஆன்மிக இந்து சமயப் பேரவை, விவசாய முன்னேற்றக் கழகத்தினா், பல்வேறு தொழிற்சங்கங்கள், பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியவை இணைந்து, வெற்றி ஊா்வலத்தை வியாழக்கிழமை நடத்தின.

இந்த ஊா்வலம் நாமக்கல் பூங்கா சாலையில் உள்ள எம்ஜிஆா் தோரணவாயில் முதல் காந்தி சிலை வரை நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கானோா் மூவா்ணக் கொடிகளை ஏந்தி மத்திய அரசுக்கும், முப்படை வீரா்களுக்கும் நன்றி தெரிவித்து முழக்கங்களை எழுப்பியவாறு வந்தனா். ஊா்வலம் நிறைவில் போரில் உயிா்நீத்த ராணுவ வீரா்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க