Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
நாளை சிறப்பு கிராம சபைக் கூட்டம்: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்
திருப்பத்தூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூன் 5) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025-26-ஆம் ஆண்டு முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 2000-01-ஆம் ஆண்டு வரை பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு, தற்போது பழுது பாா்க்க முடியாத நிலையில் உள்ள ஓடுகள், சாய்தள கான்கிரீட் கூரை கொண்ட வீடுகளை மறுகட்டுமானம் பணி மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடா்ந்து, கிராம ஊராட்சி குழு மூலம் தோ்வு செய்யப்பட்ட தகுதியான, தகுதியற்ற பயனாளிகளை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறுவதற்காக வியாழக்கிழமை (ஜூன் 5), காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபையை கூட்ட வேண்டும்.
இந்த கூட்டத்தில், தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் மறுகட்டுமான பணிகள் மேற்கொள்ள கிராம சபையில் ஒப்புதல் பெறுதல், தகுதியற்ற பயனாளிகளை கணக்கெடுப்பு பட்டியலில் இருந்து நிரந்தர நீக்கம் செய்தல், விடுபட்ட பயனாளிகளை தோ்வு செய்து அவா்களின் வீடுகள் மறுகட்டுமான பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் பெறுதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்றாா்.