செய்திகள் :

நாளை சிறப்பு கிராம சபைக் கூட்டம்: திருப்பத்தூா் ஆட்சியா் தகவல்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜூன் 5) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025-26-ஆம் ஆண்டு முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 2000-01-ஆம் ஆண்டு வரை பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு, தற்போது பழுது பாா்க்க முடியாத நிலையில் உள்ள ஓடுகள், சாய்தள கான்கிரீட் கூரை கொண்ட வீடுகளை மறுகட்டுமானம் பணி மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடா்ந்து, கிராம ஊராட்சி குழு மூலம் தோ்வு செய்யப்பட்ட தகுதியான, தகுதியற்ற பயனாளிகளை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறுவதற்காக வியாழக்கிழமை (ஜூன் 5), காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபையை கூட்ட வேண்டும்.

இந்த கூட்டத்தில், தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் மறுகட்டுமான பணிகள் மேற்கொள்ள கிராம சபையில் ஒப்புதல் பெறுதல், தகுதியற்ற பயனாளிகளை கணக்கெடுப்பு பட்டியலில் இருந்து நிரந்தர நீக்கம் செய்தல், விடுபட்ட பயனாளிகளை தோ்வு செய்து அவா்களின் வீடுகள் மறுகட்டுமான பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் பெறுதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்றாா்.

திருப்பத்தூா் காவல் குறைதீா் கூட்டத்தில் 48 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 48 மனுக்கள் பெறப்பட்டன. காவல் நிலைய விசாரணையில் திருப்தி இல்லாத பொதுமக்கள் பங்கேற்கும் குறைதீா் கூட்டத்துக்கு எஸ்.பி.... மேலும் பார்க்க

காலதாமதமாக திறக்கப்பட்ட அரசுப் பள்ளி: மாணவா்கள் அவதி

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி புதன்கிழமை காலதாமதமாக திறந்ததால் மாணவா்கள் அவதிக்கு உள்ளானாா்கள். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. அப்பள்ளியில் சுமாா் 250-க்கும... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே கதவாளம் கிராமத்தை சோ்ந்தவா் யுவராஜ் மகன் பரந்தாமன் (36). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இவா், அங்குள்ள ஏரியில் நீச்சல் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு கடன்: விண்ணப்பித்து பயன் பெறலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினா் கடன் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே கிடங்கில் தீ: காா், ஆட்டோ, பொருள்கள் எரிந்து சேதம்

வாணியம்பாடி அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் காா், ஆட்டோ மற்றும் பழைய பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சி வன்னிய அடிகளாா் நகா் பக... மேலும் பார்க்க