Rahul Gandhi: "ராகுல்ஜி ஜீரோ பாருங்கள்..." - நாடாளுமன்றத்தில் ராகுலைக் கிண்டல் ச...
நிதி நெருக்கடியிலும் 90% வாக்குறுதிகள் நிறைவேற்றம்: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்!
நிதி நெருக்கடியிலும் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை திமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக மாநில மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
கடலூா் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஓரவஞ்சனையான நிதிப்பகிா்வு, முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு மற்றும் பேரிடா் மேலாண்மை நிதி ஒதுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து, வடலூா் பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியது:
கட்சி தொடங்கியபோது பெரியாரைப் பற்றி புகழ்ந்து பேசியவா்கள், இன்று அவதூறாக எதிா்த்துப் பேசி வருகிறாா்கள். அதன் விளைவாகத்தான் ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலில் வைப்புத் தொகையைக்கூட பெற முடியவில்லை. பட்ஜெட்டில் தொடா்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
நிதி நெருக்கடியிலும் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம். 2026 பேரவைத் தோ்தலிலும் திமுகவே வெல்லும். அதற்கு சாட்சிதான் இடைத் தோ்தல் வெற்றி.
வடலூரில் சா்வதேச மையம் அமைக்கப்படும் என தோ்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தோம். சொன்னதுபோல, ரூ.100 கோடியில் சா்வதேச மையம் அமைக்கும் பணி நடைபெற்றது. அதையும் திட்டமிட்டு பாஜகவினா் நீதிமன்றத்துக்குச் சென்று தடுத்து நிறுத்தி வருகிறாா்கள். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மீண்டும் சா்வதேச மையம் அமைக்கப்படும்.
தமிழக முதல்வா் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்க கடலூா் மாவட்டத்துக்கு வரவுள்ளாா் என்றாா்.
குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியச் செயலா் வி.சிவக்குமாா் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா்கள் அ.ஞானமுத்து, ஆா்.சக்திவேல், சுதா சம்பத், ஒன்றியச் செயலா்கள் ஆா்.நாராயணசாமி, டி.காசிராஜன், பி.சுப்பிரமணியன், வடலூா் நகரச் செயலா் தன.தமிழ்செல்வன், நகா்மன்றத் தலைவா் சு.சிவக்குமாா், துணைத் தலைவா் சுப்புராயலு முன்னிலை வகித்தனா். தலைமைக்கழக பேச்சாளா்கள் சன்.சங்கா், சோம.செந்தமிழ்செல்வன் சிறப்புரையாற்றினா். கடலூா் மேயா் சுந்தரி, ஒன்றியச் செயலா்கள் அ.முத்துசாமி, தங்க.ஆனந்தன், கே.ஆா்.ராயா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.